தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா நேற்று தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது. தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர்.
புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன்,22, முன்னாள் ராணுவ வீரர் பிரதாப்,36, அன்பழகன்,60, இவரது மகன் ராகவன்,24, நாகராஜ்,60, சந்தோஷ்,15, செல்வம்,56, ராஜ்குமார்,14, சாமிநாதன்,56, கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


புலன் விசாரணை
தேர் திருவிழாவில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: களிமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சப்பர இழுப்புத் திருவிழா நடைபெறும். இப்போது தேர் இழுக்கும்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் பாதையில் சப்பரத்தின் உச்சிப்பகுதி உரசியது. இது எப்படி உரசியது என்பது விசாரணையில் தெரிய வரும்.இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் நிகழ்விடத்திலும், 8 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இறந்தனர். மேலும் காயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது என வழக்குப்பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும். குறைந்த மின் அழுத்த பாதை ஏற்கெனவே அணைக்கப்பட்டிருந்தது. உயர் மின்னழுத்த பாதை மூலம் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் ஆறுதல்
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தினை முதல்வர் வாசித்தார். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் ஸ்டாலின் மதுரை வழியாக தஞ்சாவூர் சென்றார். களிமேடு கிராமத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண நிதியையும் வழங்கினார். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
வாசகர் கருத்து (65)
திருவிழா கமிட்டீயினர் திருவிழா தொடங்குவதற்கு சில நாட்கள் முன் வருவாய்த்துறை, காவல் துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை போன்றவர்களுக்கு எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சரியான பாதுகாப்பு கொடுப்பார்கள். அவ்வாறு பாதுகாப்பு கொடுக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களும், அரசும் பொறுப்பாகும்.
இதுமாதிரி நிகழ்வுகள் கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் விடியாத ஆட்சியில் அடிக்கடி நடப்பது தெய்வம் ஏதோ சொல்ல நினைக்கிறது என்று அர்த்தம். திருந்துவாரா?
ஆழ்ந்த வருத்தங்கள், பல கிராமங்களில் முறையான அனுமதி பெறாமலே, தேர், திருவிழாக்கள் நடக்கிரது
33 kV ஹை வோல்ட்டேஜு பாசாவ்ர கம்பிய தொட்டாக்கா செல, சப்பரம், பூச, இதுங்களால எதுவும் செய்யமுடியாது
இந்த விபத்துக்கு ஒட்டுமொத்தமாக அரசை குறைகூறிவிடமுடியாது. தேர்த்திருவிழா நடத்திய கோவில் நிர்வாகிகள் பொறுப்பாக சம்பந்தப்பட்ட மின்துறைக்கு, காவல்துறைக்கு திருவிழா பற்றி தெரியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த விபத்து ஏட்பட்டிருக்கவே ஏட்பட்டிருக்காது. சாமி குத்தம், என்று சாமி மீது பழி பழிபோடுவதும் சரியல்ல.