Load Image
Advertisement

முதல்வர் பதவி விலகுவதற்கான நேரம்: அண்ணாமலை தாக்கு

Tamil News
ADVERTISEMENT

சென்னை: மயிலாடுதுறையில் கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கறுப்புக்கொடி வீசிய சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கவர்னரின் பாதுகாப்பு முற்றிலும் சமரசம் செய்யப்பட்டதாகவும், முதல்வர் ஸ்டாலின் பதவியில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். மன்னம்பந்தல் வழியாக தர்மபுர ஆதீனத்தை வந்தடைந்தார். அப்போது மணபந்தல் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும் , ஜனாதிபதிக்கு அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்களை கடந்து கவர்னர் சென்று விட்ட நிலையில், பாதுகாப்புக்காக சென்ற வாகனங்கள் மீது கொடிகள் மற்றும் கம்புகளை வீசி எறிந்தனர்.

Latest Tamil News
போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை தடுப்பதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது: இன்று மயிலாடுதுறையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு முற்றிலும் சமரசம் செய்யப்பட்டது. அவரது கான்வாய் மீது திமுக ஆதரவாளர்கள் கல் மற்றும் கொடிக்கம்பங்களை வீசினர். நமது முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியின் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒருவரை கண்மூடித்தனமாக வெறுக்கிறார். அவர் பதவியில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது. கவர்னருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு, மாநில அரசே முழு பொறுப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (95)

  • venkatan - Puducherry,இந்தியா

    பசங்க கொஞ்சம் ஓவரா விளையாடி ட் டாங்க பாஸ்..மத்தபடி மேஜர் problam இல்லயங்க..நம்மூர் பண்ணை...

  • Ganesh - Chennai,இந்தியா

    பெட்ரோல் டீசல் விilyaய பதியம் பேசுங்க அண்ணாமலை விலைவாசி விண்ணை முட்டுது, சாமான்ய மக்களால் சமாளிக்க முடியல்ல.

  • Abi - Reno,யூ.எஸ்.ஏ

    அண்ணாமலையின் அறிக்கை வந்தாலே தி மு க விற்கு நடு நடுக்கம் வந்து விடுகிறது. குடும்ப அரசியல் மிக விரைவில் காணாமல் போகும். இனியும் தி மு க வின் அராஜகபோக்கு நீடித்தால் அது மத்திய அரசால் அடக்கபடும்.

  • Venkat - Mumbai,இந்தியா

    ஸ்கூல் பசங்களையெல்லாம் யாரு ஓய் மாநிலத்து தலைவர் ஆக்குனது...?

  • Venkat - Mumbai,இந்தியா

    இன்னும் முளைக்கவே இல்ல... எதுக்கு இவ்ளோ வாயோ.. இருக்குற நாலு சீட்டும் போகப் போகிறது உறுதி...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up