ADVERTISEMENT
முதல்வர் ஸ்டாலின் அரசு பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்று வந்துள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பயணத்தில், ஆறு நிறுவனங்கள், 6,100 ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் பின்னணியில், முதல்வரின் மருமகன் சபரீசன் முக்கிய பங்காற்றி உள்ளார். இதை முன்னதாகவே மத்திய உளவுத் துறை அறிந்து, மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, முதல்வரின் பயணம் முழுவதையும், மத்திய உளவுத் துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் கண்காணித்துள்ளனர்.

மத்திய உளவுத் துறை அலுவலர்கள், துபாய் மற்றும் அபுதாபிக்கு நேரடியாகச் சென்று, அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்த விபரங்களை சேகரித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். பணப் பரிமாற்ற விஷயங்கள் எதுவும் நடந்ததா என்பது குறித்து, அமலாக்கத் துறை விசாரணை நடத்தி உள்ளது. அமலாக்கத் துறை அறிக்கை அளித்தால், அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கலாம் என்கிறது டில்லி வட்டாரம்.
அதேபோல், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், தனக்குரிய வழிகளில், முதல்வர் பயணம் தொடர்பாக, சில தகவல்களை திரட்டி உள்ளார். கவர்னர் ரவியிடம் அவற்றை வழங்க, அவர் திட்டமிட்டுள்ளாராம்.
வாசகர் கருத்து (62)
ரொம்ப நல்ல மனசுப்பா, ஒரு நல்ல விஷயமா போன, வாழ்த்து சொல்ல தெரியாதா ? மனிதர்கள் தானா ?, திறமை இருந்தால், கருப்பு பணத்தை பிடிங்கப்பா, என்னது , இது நீங்களே சொன்னதுதான், ஞாபக படுத்துறேன் .
ஒரே ஒரு நடவடிக்கை தான் இருக்கும். பாஜக திமுகவின் கழுத்தில் கத்தியை வைத்து துபாய் லாபத்தைக் கறந்து கொள்ளும். அண்ணாமலையை காஷ்மீருக்கு கவர்னராக அனுப்பும். சுபம்.
சும்மா பூச்சாண்டி காட்டுவதை விட்டு விட்டு தகுந்த ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே !
நெறைய பூச்சி காட்டுவாங்க இதுக்கெல்லாம் பயந்துக்குவாங்களா கெஞ்சுனா மிஞ்சனும் மிஞ்சுனா கெஞ்சனும் அதுக்குப்பேர்தான் டிப்ளமசி
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
டீம்காவை மிரட்டி கூட்டணி வைப்பாங்க ....... அதிமுகவுக்கு என்ன ஆச்சோ அது திமுகவுக்கும் 2032 க்குள் நடக்கும் .......... 2026 இல் பிஜேபி திமுக கூட்டணி ஆட்சி ..........