புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது, காங்கிரசில் நீறுபூத்த நெருப்பாக இருந்த கோஷ்டி பூசலை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது.
'காங்கிரசுக்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் உள்ளிட்ட 23 பேர், 2020ம் ஆண்டு கடிதம் எழுதினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடிதம் எழுதிய தலைவர்களுக்கு கட்சி எம்.பி., ராகுல் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன்பின் 23 தலைவர்களும் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர். ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் முடிந்த நிலையில் குலாம் நபி ஆசாத்துக்கு எம்.பி.,யாக காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றோரின் பட்டியலை மத்திய அரசு நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. இதில் பத்ம பூஷண் விருது பெறுவோர் பட்டியலில் குலாம் நபி ஆசாத் பெயரும் இடம் பெற்றிருந்தது. இது காங்கிரசில் நீறுபூத்த நெருப்பாக இருந்த கோஷ்டி பூசலை மீண்டும் கிளப்பி விட்டுள்ளது. குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுவது பற்றி காங்கிரஸ் தலைமை இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், சோனியாவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதிய அதிருப்தி தலைவர்களில் பெரும்பாலானோர் குலாம் நபி ஆசாத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
கபில் சிபல் கூறுகையில்,''பத்ம பூஷண் விருது பெறும் குலாம் நபி ஆசாத்துக்கு வாழ்த்துகள்;அவரது பணிகளை காங்கிரஸ் மதிக்கவில்லை; நாடு அங்கீகரித்துள்ளது,'' என்றார்.
ஆனந்த் சர்மா கூறுகையில், ''குலாம் நபி ஆசாத்தின் பல ஆண்டுகால பொது சேவைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது,'' என்றார்.
சசி தரூர் கூறுகையில், ''குலாம் நபி ஆசாத்துக்கு வாழ்த்துகள். ஒருவரது பொதுச் சேவையை மாற்று கட்சி அரசு மதித்து அங்கீகரித்துள்ளது சிறப்பு,'' என்றார்.
அதே நேரத்தில் விருதை ஆசாத் ஏற்பதற்கு காங்கிரசில் எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், பத்ம பூஷண் விருது பெறுவோரில் இடம் பெற்றுள்ளார். ஆனால் விருதை ஏற்க அவர் மறுத்து விட்டார்.
இதையடுத்து, காங்கிரசின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:புத்ததேவ் சரியான காரியத்தை செய்துள்ளார். அவர் 'ஆசாத்' ஆக இருக்க விரும்புகிறார். 'குலாம்' ஆக இருக்க விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
ஹிந்தியில் 'ஆசாத்' என்றால் விடுதலை, குலாம் என்றால் அடிமை என அர்த்தம். பத்ம பூஷண் விருதை ஏற்கும் குலாம் நபி ஆசாத்தை விமர்சிக்கும் நோக்கில் ஜெய்ராம் ரமேஷ் இப்படி கூறியுள்ளது, காங்கிரசில் மீண்டும் கோஷ்டி பூசலை அதிகரித்துள்ளது.
இதனிடையே குலாம் நபி ஆசாத் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது: என் சமூக வலைதள கணக்கில் உள்ள புகைப்படத்தையும், அதில் உள்ள சில தகவல்களையும் நான் மாற்றி விட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. நான் கட்சி தாவப் போவதாக சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். நான் எந்த புகைப்படத்தையும் மாற்றவில்லை என தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (20)
விருதை மறுப்பவர்கள் தனக்கு எந்தவிதமான திறமை இல்லை என்பதை மக்களிடம் ஒத்துக்கொள்கிறார்கள் மறுப்பவர்கள் கட்சியால் தான் தனக்கு பெயரும் புகழும் உள்ளது தனிப்பட்ட திறமை இல்லை என்பது உறுதியாகிறது
This is another example for implementing inclusiveness in true sense by the present government. Earlier Pranab Mukherjee got Bharat Rathna , then sharatpawar got padma vibushan . In UPA rule people who were chamchas were given awards
Congress ambedkar Patel ponra avargal katchi atkalukke kudukkavillai. Anaal bjp ethir katchi atkalukku kooda kodudupathu sirappu.
யாருமே கால் வைக்க பயந்த காலத்தில் ஜம்மு காஷ்மிர் முதல்வராக பெரும் சேவை புரிந்ததை மக்கள் மறந்து விடவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் இது போன்று எதிர்க்கட்சியில் உள்ளவருக்கு விருதுகள் வழங்கியதுண்டு.
ஆசாத் காங்கிரஸ் உருவாக நல்ல தருணம்