மது அருந்துவது, புற்று நோயைத் துாண்டக்கூடும் என்று ஒரு மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக உணவுக்குழாய் புற்று நோய், கழுத்து மற்றும் தலை புற்றுநோய்கள் வருவதற்கும் மது அருந்தும் பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சீனாவில், 1.5 லட்சம் பேரிடம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், 'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் கேன்சர்' இதழில் வெளியாகிஉள்ளது. மதுப் பழக்கம் இல்லாதவர்களின் மரபணுவில் அதைக் குறிக்கும் சில தன்மைகள் இருப்பதுண்டு. இதையும், பல ஆண்டுகளாக மது அருந்துவோரின் மரபணுக்களில் தோன்றும் அறிகுறிகளையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எனவே, மது அருந்துவதாலேயே புற்றுநோய் துாண்டப்பட்டது என்பதை அறிவியல் பூர்வமாக மருத்துவர்களால் சொல்ல முடிந்திருக்கிறது. எனினும், முழுதும் கிழக்காசிய மரபணுவினருக்கு, மதுவால் புற்றுநோய் உருவாகக்கூடும் என்பதை இந்த ஆய்வு தெரிவிப்பதாக மேற்குலக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எல்லாருக்கும் இது பொருந்துமா என்பதை, மற்ற நாடுகளிலும் சோதித்துப் பார்த்தால்தான் உறுதிப்படுத்த முடியும்.
சீனாவில், 1.5 லட்சம் பேரிடம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், 'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் கேன்சர்' இதழில் வெளியாகிஉள்ளது. மதுப் பழக்கம் இல்லாதவர்களின் மரபணுவில் அதைக் குறிக்கும் சில தன்மைகள் இருப்பதுண்டு. இதையும், பல ஆண்டுகளாக மது அருந்துவோரின் மரபணுக்களில் தோன்றும் அறிகுறிகளையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எனவே, மது அருந்துவதாலேயே புற்றுநோய் துாண்டப்பட்டது என்பதை அறிவியல் பூர்வமாக மருத்துவர்களால் சொல்ல முடிந்திருக்கிறது. எனினும், முழுதும் கிழக்காசிய மரபணுவினருக்கு, மதுவால் புற்றுநோய் உருவாகக்கூடும் என்பதை இந்த ஆய்வு தெரிவிப்பதாக மேற்குலக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எல்லாருக்கும் இது பொருந்துமா என்பதை, மற்ற நாடுகளிலும் சோதித்துப் பார்த்தால்தான் உறுதிப்படுத்த முடியும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!