புதுடில்லி : முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணியர், பிப்., 11 முதல் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுவர் என பிரிட்டன் அரசு அறிவித்து உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.இதில் பிப்., 11 முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன் விவரம் வருமாறு: முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணியர் பிப்., 11 முதல் எவ்வித பரிசோதனையும் இன்றி பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படுவர். தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அவர்கள் பின்பற்ற வேண்டாம். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர், தங்கள் பயணத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பில்லா சான்றுடன் வர வேண்டும்.
பிரிட்டன் வந்த இரண்டாவது நாள் அவர்களுக்கு ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை நடத்தப்படும். பிரிட்டனில் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி பணிகள் வெற்றி அடைந்துள்ளது மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்களுக்காக தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.
பிரிட்டனுக்கான பயண கட்டுப்பாடுகளில் அமலாகும் தளர்வுகள் மாணவர்கள், தொழிலதிபர்கள் உட்பட நம்நாட்டினருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என டில்லி வட்டாரங்கள் கூறி உள்ளன.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.இதில் பிப்., 11 முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன் விவரம் வருமாறு: முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணியர் பிப்., 11 முதல் எவ்வித பரிசோதனையும் இன்றி பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படுவர். தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அவர்கள் பின்பற்ற வேண்டாம். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர், தங்கள் பயணத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பில்லா சான்றுடன் வர வேண்டும்.

பிரிட்டன் வந்த இரண்டாவது நாள் அவர்களுக்கு ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை நடத்தப்படும். பிரிட்டனில் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி பணிகள் வெற்றி அடைந்துள்ளது மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்களுக்காக தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.
பிரிட்டனுக்கான பயண கட்டுப்பாடுகளில் அமலாகும் தளர்வுகள் மாணவர்கள், தொழிலதிபர்கள் உட்பட நம்நாட்டினருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என டில்லி வட்டாரங்கள் கூறி உள்ளன.
பிரிட்டன் உட்ப்பட பல நாடுகள் கோவிட்19 ஐ கடந்துவிட்டது போலத்தான் தெரிகிறது. சிறப்பு.