ரேஷன் அரிசி கடத்தல் ஏழைகளுக்கு எதிரானது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து

துாத்துக்குடி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், 2021 பிப்.,6 ல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சிலர், அனுமதியின்றி 350 பிளாஸ்டிக் பைகளில், ரேஷன் அரிசியைக் கொண்டு சென்றதைக் கண்டுபிடித்தனர்.அரிசி மற்றும் அதை கடத்த பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு:
ரேஷன் அரிசி கடத்தலில் முக்கிய நபராக மனுதாரர் பெயர் சேர்க்கப் பட்டுஉள்ளது, முதலாவது எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படித்தால் தெரிகிறது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கொள்முதல் செய்து, விற்பனை செய்த முக்கிய நபர் மனுதாரர் என்பதும் தெரியவந்துள்ளது. ரேஷன் அரிசியை ஏழைகள் பயன்படுத்துகின்றனர். அந்த அரிசியை கடத்துவது, ஏழைகளின் பொருளாதாரத்திற்கு எதிரான குற்றமாக அமையும். முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மூவருக்கு 'குண்டாஸ்'
கடலுார் மாவட்டம் சிறுபாக்கம் போலீசார், கடந்த 26ம் தேதி, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மாங்குளத்தில் ஒரு லாரியை சோதனையிட்டதில், 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, மங்களூரு ரஞ்சித், 25; வேல்முருகன், 30; சங்கரன்பாளையம் ராமச்சந்திரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு, விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித், வேல்முருகன், ராமச்சந்திரன் ஆகியோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (7)
சரி அதுக்கு இப்போ என்ன செய்யப்போறீங்க. அதிகாரம் இருப்பவர்கள் ஒன்றும் பிரயோஜனமில்லாமல் கருத்துக்களை கூறி கடந்து செல்வதுதான் பிரச்சனையே.
அடுத்தது தீம்கா ஆட்சி ஏழைகளை உருவாக்குவது அல்லது அவர்களை அப்படியே வைத்திருப்பது. அந்தக் கட்சியில் இருக்கும் ரவுடிகள் மட்டுமே கோடிகோடியாக சொத்து சேர்ப்பது என்று சொல்வார் போலிருக்கிறது. இது படிக்காத பாமரனுக்கும் தெரிந்த விஷயம் தானே
ஏழைகளுக்கு மட்டும் ரேஷன் அரிசி வழங்காமல் வாக்கு வங்கிக்காக பிரபஞ்ச பொது விநியோக திட்டம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கெல்லாம் இலவசமாக ரேஷன் அரிசியை வழங்குவதால் அவர்கள் கடத்தல் காரர்களிடம் அல்லது ஏழைகளுக்கு விற்று மாதந்தோறும் பணம் சம்பாதிக்கின்றனர்.இதனால் அரசுக்கு மாதந்தோறும் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு.மேலும் மத்திய அரசு கொரோனா நிவாரணமாக வழங்கும் இலவச அரிசி பணக்காரர்களுக்கெல்லாம் அந்தியோதையா அண்ணா யோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் கொடுத்துவிட்டு பரம ஏழைகள் மற்றும் ஏழைகளுக்கு முன்னுரிமை இல்லாத ரேஷன் கார்டுகள் கொடுத்து மோசடி செய்ததால் பணக்காரர்கள் காசு பார்க்க ஏழைகள் முணுமுணுத்துக்கொண்டுள்ளனர்.கண் துடைப்புக்காக ஒரு சிலர் மீது வழக்கு.
மிகவும் வசதி உள்ளவர்கள் ரேஷனில் அரிசி வாங்குகிறார்கள் .
அஃகா ஆகக்கா கண்டுபுடிச்சிட்டோம்ல.. இனி ஒரு புரட்சி நடக்கும்... ஹய்யோ ஹய்யோ...