பின்,அவர் கூறியதாவது: உள்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின், தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும். வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து, மின் கட்டணம் உயரப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதில் உண்மை இல்லை.லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கான காரணம் குறித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒன்றைக் கூறுகிறார். அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், வேறு ஒரு விஷயத்தை கூறுகின்றனர்.

இதில் எது உண்மை என்பது குறித்து, முதலில் அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும். பின், என் மீது குற்றம் சொல்லட்டும். இந்தியாவிலேயே ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி தங்கமணி தான்.வடசென்னை மற்றும் துாத்துக்குடி அனல்மின் நிலையங்களில் காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்கு தெரியாத 'கிரிப்டோ கரன்சி' இரண்டுக்கும் அவர் முதலில் விளக்கம் சொல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
10 ஆயிரம் டன் நிலக்கரி
மத்திய அமைச்சரிடம் செந்தில் பாலாஜி அளித்துள்ள மனுவில், 'தமிழகத்திற்கு ஆண்டுக்கு 2.37 கோடி டன் நிலக்கரி மத்திய அரசால் அனுப்பப்பட வேண்டிய நிலையில், 1.71 கோடி டன் மட்டுமே வழங்கப்படுகிறது. தினமும் 10 ஆயிரம் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒடிசா மாநிலம், சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஒதுக்கீடு பெற, 2016 மார்ச் 30ல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 66 மாதங்கள் முடிந்தும், நிலக்கரி எடுக்கப்படவில்லை. வனத் துறை ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதற்கான ஒப்பந்த காலத்தை நீட்டித்து தர வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
- நமது நிருபர் -
பித்தளை இளிக்கும் என்று சொல்வார்கள் -திமுக ஆட்சியில் அது நன்றாகவே நடக்கிறது