உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சித்திரை முதல் நாள், தமிழ்ப் புத்தாண்டு என காலங்காலமாய் கொண்டாடப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி, எந்த அவசியமும் இன்றி தமிழ்ப் புத்தாண்டை, தை மாதம் 1ம் தேதிக்கு மாற்றி மகிழ்ச்சி அடைந்தார்.
கருணாநிதிக்கு பின், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., முன்னாள் பொதுச்செயலர் ஜெயலலிதா, சித்திரை 1ம் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். தற்போது முதல்வராக உள்ள கருணாநிதியின் மகன் ஸ்டாலின், தமிழ்ப் புத்தாண்டு விஷயத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள பையில், 'தமிழ்ப் புத்தாண்டு' என குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று, கோவில்களில் பூஜை செய்து பஞ்சாங்கம் படிக்கப்படும்; மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடுவர். சர்ச் மற்றும் மசூதியில், தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு ஏதும் நடப்பதில்லை. எனவே, தமிழ்ப் புத்தாண்டை மாற்றும் கோமாளித்தனத்தை, தமிழக அரசு நிறுத்த வேண்டும்.
,கார்த்திக் திண்டுக்கல்: யுகாதி வருடபிறப்பு ( தெலுங்கு வருடபிறப்பு சந்திரன் போக்கை வைத்து கொண்டாடப்படுவது. அது பங்குனி அமாவாசைக்கு அடுத்த நாள் வரும். அதை சைத்ர மாதம் என்றுதான் கூறுவார்கள். தமிழ் வருட பிறப்பு சூரியன் போக்கை வைத்து, அதாவது சூரியன் என்று முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் போது சித்திரை திருநாள் கொண்டாடப் படுகிறது. மலையாள விஷு இந்த நாளிலோ அல்லது அநேகமாக அடுத்த நாளிலோ கொண்டாடப் படுகிறது. அஸ்ஸாம் போன்ற மாநிலத்தில் பிகு என்று இந்நாளை கொண்டாடுவார்கள். திமுகவினர் என்று வேணாலும் கொண்டாடட்டும். விவரம் அறிந்த தமிழர்கள் சித்திரை திருநாளைத்தான் தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடுவார்கள். மேலும் அநேக காரணங்கள் உண்டு. இதெல்லாம் விவசாயிகள் சம்பத்தப் பட்ட விஷயம். பஞ்சாப் மாநிலத்திலும் அப்போது தான் கொண்டாடுவார்கள். பகலவன் மிகவும் பிரகாசமாக இருக்கும் மாதம் சித்திரை. ஆனால் நம் " பகுத்தறிவு பகலவன்கள்" பகலவன் பிரகாசமாக இல்லாத போது தான் பகலவனை கொண்டாடுவார்கள்.