சென்னை: பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த செப்.,9ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின்போது, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அளித்திடும் வகையில், 'பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு இன்று (டிச.,03) அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற நலத்திட்ட உதவிகளுடன், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருக்கலைப்பு / கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் நலவாரியத்தின் மூலம் வழங்க இந்த அரசாணை வழிவகை செய்கிறது.
வாசகர் கருத்து (5)
அரசுக்கு ஐந்து பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாத வக்கீல்கள் மற்றும் சில ஊடக பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் நலவாரியம் அமைப்பது தண்டம் தான்.
முட்டு பாய்ஸ் நல சங்கம் ன்னு பெரு வைக்கலாம்ல... உண்மையை சொன்னேன்.. உண்மைனா, டீம்காவுக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது..
இந்த மாதிரி, திருட்டு கட்சியில் நடக்கும் நடக்கப்போகும் நிகழ்வுகளையும் பத்திரிக்கையில் போடாமல், போட்டோசூட் பற்றி மட்டும் போடவும், வாழ்க கோசம் போடவும் டீம்கா ஏற்பாடு செய்த நீண்ட நாள் திட்டம்தான் 'பத்திரிக்கையாளர் நல வாரியம்'............. நிச்சயமாக , பத்திரிக்கையில் பனி புரியும் நேர்மையான அன்பர்கள் மனம் வருந்துவார்கள்....ஒன்று, வேறு துறையில் வேலைக்கு செல்வது அல்லது செஞ்சோற்று கடன் ஆற்றுவது ...............ரென்டெ வாய்ப்பு...உண்மை என்ற வார்த்தையை பத்திரிக்கை நலவாரியம் இனிமேல் தடை செய்யப்பட்ட தீய வார்த்தையாக பாவித்து நடந்துகொள்ளும் என்பதை, வரலாறு தெரியாத அன்பர்கள் பார்த்து அறிந்துகொள்வார்கள் ...டீம்கா வரலாறு தெரிந்த நண்பர்களுக்கு இதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி....மணப்பது மணக்கும்.........நாறுவது நாறவே செய்யும்...அது அது அதன் குணத்தோடு.......டீம்கா தோற்றம் எப்படியோ............ஆனால், இப்பொழுதும் இனிமேலும், ஒரு குடும்ப வாழ்விற்கு உழைக்கும் 'அஹிம்சாவாதி' அடிமைகளின் கூட்டம்.................
We need MAKKAL NALA VAARIYAM
பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் உதவியா அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் உதவி செய்யவேண்டும் கேரளாவிலும் பத்திரிக்கை துறையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் அரசு தருகிறதாம்