தடுப்பூசி போட்டவர்களுக்கே மதுபானம் விற்பனை: அமைச்சர் சுப்பிரமணியன்
சென்னை--''தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான், டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படும்,'' என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை அடையாறில் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:தமிழகத்தில் 78 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டிய நிலையில், 12வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதுவரை 77.33 சதவீதம் பேர் முதல் தவணை; 42 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை போட்டுள்ளனர். பொதுவெளியில் கலந்து கொள்வோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளது. இது, மதுபான கூடங்களுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும்.
எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் வாங்க வருவோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மது வகைகள் விற்கப்படும். இதை கண்காணிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.


வாசகர் கருத்து (39)
தடுப்பூசி போட்டவர்களுக்கெ லஞ்சம்.
இலவ சங்கள் வேண்டுமெனில் தடுப்பூசி அவசியம் என்றால் அனைவரும் போட்டுக்கொள்வார்கள்
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குடிப்பவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூலம் வாங்கி விடுவார்கள் .
அரசின் அடி வயிற்றிலேயே கை வைக்கிறீரே " மா சு." தளபதி நிதிக்கு எங்கே போவாருன்னு யோசிக்க வேண்டாமா ?
இந்த ஆளு வேற அப்பப்போ வந்து காமெடி பண்ணிட்டு இருக்காரு..உங்க சட்டம் எல்லாம் ஓடுற தண்ணில தான் எழுதனும்.