சென்னை: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், இன்று (நவ.,25) பிற்பகலில் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால், சாலையில் தண்ணீர் தேங்கியது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி,புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அங்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், நாளை (நவ.,26) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், இன்று (நவ.,25) பிற்பகலில் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.

10 மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக, நாளை(நவ.26) தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலுார், தேனி, தென்காசி, பெரம்பலுார், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக, நாளை(நவ.26) மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோயிலில் மழைநீர் புகுந்தது. இதனால், பிரகாரம் மூழுதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடியில் 25 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி,புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அங்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், நாளை (நவ.,26) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!