Load Image
Advertisement

நேர்மை அதிகாரிகளுக்கு தண்டனை: முறைகேடு அதிகாரிக்கு முக்கியத்துவம்

திருநெல்வேலி;நேர்மையாக பணியாற்றிய இரண்டு அதிகாரிகளில் ஒருவரை இடமாற்றியும், ஒருவரை, 'சஸ்பெண்ட்' செய்தும் ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. முறைகேடாக சான்றிதழ் வழங்கியதற்காக உயர் நீதிமன்றம் கண்டித்த ஒரு அதிகாரியை மீண்டும் விரும்பிய இடத்தில் பணியமர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.பெண் அதிகாரிதிருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலராக இருந்தவர் சுபாஷினி. வள்ளியூர், திசையன்விளை பகுதியில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் செயல்பட்ட தனியார் கனிம நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தை மீட்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் சுபாஷினி, தென்காசி மாவட்டம், நவநீதகிருஷ்ணசாமி கோவிலுக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் பகவதியம்மன் கோவிலில் பணியாற்றிய வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.கண்டித்தவர் நியமனம்வேலுச்சாமி ஏற்கனவே 2009ல், வள்ளியூரில் பணியாற்றியவர். அப்போது மீனாட்சியம்மாள் என்பவர், 1919ல் கோவிலுக்கு எழுதி வைத்த நிலத்தை அவரது தரப்பிடம் இருந்து ஜெபமணி என்ற கிறிஸ்துவர் வாங்கியிருந்தார். ஜெபமணியும், மகன் வேதசிங்கும் தங்களை கோவில் அக்தார் என அறிவிக்கக் கோரி, உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'ஒரு கிறிஸ்துவர், ஹிந்து கோவிலுக்கு அக்தார் ஆக முடியாது. ஆனால், அவர் அக்தார் ஆகலாம் என தடையின்மை சான்றிதழ் வழங்கிய கோவில் செயல் அலுவலர் வேலுச்சாமி, கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய தன் பதவிக்கு உகந்தவராக நடந்து கொள்ளவில்லை' என, தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.உயர் நீதிமன்ற உத்தரவிற்கு பின் அந்த நிலம் மீட்கப்பட்டது. வேலுச்சாமி வடமாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது தி.மு.க., ஆட்சி வந்ததும் விருப்ப மாறுதல் கேட்டு, 10 நாட்களில் விரும்பிய இடத்திற்கு பொறுப்புக்கு வந்துள்ளார். நேர்மையான பெண் அதிகாரி சுபாஷினி, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சுபாஷினி இடமாற்றம், வேலுச்சாமி அதே இடத்திற்கு நியமனம் ஆகிய விவகாரங்களில் 'அரசியல்' தலையீடு உள்ளதாக கூறப்படுகிறது.அதிகாரி 'சஸ்பெண்ட்'இதேபோல் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. திருச்செந்துாரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட கேரள விடுதியை தனியார் சிலர் வாடகைக்கு விட்டு சம்பாதித்தனர். பொதுநல வழக்கு மூலம் விடுதியை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள விடுதியை கோவிலின் செயல் அலுவலர் அஜீத் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு மீட்டார். அதன் வருமானம் கோவிலுக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அஜீத், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.உயரதிகாரிகள், கட்சியினரின் சுயநலனுக்காக அறநிலையத் துறை அதிகாரிகள் பந்தாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரங்கள் முதல்வர் ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement