ADVERTISEMENT
மேலுார் : மேலுார் அருகே சருகுவலையபட்டி ஊராட்சி அரியூர்பட்டியில் பொதுப்பணித்துறை
பராமரிப்பில் உள்ள ரூ. பல லட்சம் மதிப்புள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வியாபாரிகள் 'டன்' கணக்கில் வெட்டி கடத்தியுள்ளனர்.
இங்குள்ள மோகினிசாத்தான் குளத்தில் பழமையான வாகை, புளி, வேம்பு மற்றும் சிறிய
சந்தன மரங்கள் உட்பட பத்து வகையான மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதில் சந்தனம் உள்ளிட்ட 95 மரங்களை நேற்று முன்தினம் இரவு விறகு வியாபாரிகள் சிலர் வெட்டி லாரிகளில் கடத்தினர். இதை அறிந்து அங்கு சென்று வி.ஏ.ஓ., பிச்சைராஜூ தடுத்து நிறுத்தினார். அதற்குள் பெரும்பாலான மரங்கள் கடத்தப்பட்டு விட்டன.
மரங்களை கடத்தியவர்களிடம் அவர் விசாரித்த போது பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்காதது தெரிந்தது. இந்நிலையில் வெட்டப்பட்டு கடத்தப்படாத மரங்களை பிரச்னை ஓய்ந்த பிறகு எடுத்துச்செல்ல ஏதுவாக அதன் மீது இலைகளை போட்டு மறைத்து வைத்துள்ளனர். மரம் கடத்தல் குறித்து தாசில்தாருக்கு வி.ஏ.ஓ., அறிக்கை அனுப்பி உள்ளார்.
நேற்று மாலை வெட்டப்பட்ட மரங்களை வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தலைமறைவான விறகு வியாபாரிகள் குறித்து போலீசில் புகார் தெரிவிக்க உள்ளனர்.
இதற்கிடையே மாவட்டத்தில் கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள மரங்களை பாதுகாக்க அந்தந்த பகுதி ஊராட்சி, பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பராமரிப்பில் உள்ள ரூ. பல லட்சம் மதிப்புள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வியாபாரிகள் 'டன்' கணக்கில் வெட்டி கடத்தியுள்ளனர்.
இங்குள்ள மோகினிசாத்தான் குளத்தில் பழமையான வாகை, புளி, வேம்பு மற்றும் சிறிய
சந்தன மரங்கள் உட்பட பத்து வகையான மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதில் சந்தனம் உள்ளிட்ட 95 மரங்களை நேற்று முன்தினம் இரவு விறகு வியாபாரிகள் சிலர் வெட்டி லாரிகளில் கடத்தினர். இதை அறிந்து அங்கு சென்று வி.ஏ.ஓ., பிச்சைராஜூ தடுத்து நிறுத்தினார். அதற்குள் பெரும்பாலான மரங்கள் கடத்தப்பட்டு விட்டன.
மரங்களை கடத்தியவர்களிடம் அவர் விசாரித்த போது பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்காதது தெரிந்தது. இந்நிலையில் வெட்டப்பட்டு கடத்தப்படாத மரங்களை பிரச்னை ஓய்ந்த பிறகு எடுத்துச்செல்ல ஏதுவாக அதன் மீது இலைகளை போட்டு மறைத்து வைத்துள்ளனர். மரம் கடத்தல் குறித்து தாசில்தாருக்கு வி.ஏ.ஓ., அறிக்கை அனுப்பி உள்ளார்.
நேற்று மாலை வெட்டப்பட்ட மரங்களை வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தலைமறைவான விறகு வியாபாரிகள் குறித்து போலீசில் புகார் தெரிவிக்க உள்ளனர்.
இதற்கிடையே மாவட்டத்தில் கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள மரங்களை பாதுகாக்க அந்தந்த பகுதி ஊராட்சி, பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
அப்புறம் உடன்பிறப்புக்கள் எப்படி பொழைக்கிறது..... இந்த விடியல் அரசில்..... இப்படித்தான்....
இதற்க்கு கடிகாரங்கள் தான் காரணம் . காலை11.05 மணி ஆயிடடிச்சுனா ஆக்க்ஷன் தான்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Wherever sandalwood tree grows it is government property in India.