நவ்ஜோத் சிங் சித்து இன்று பொறுப்பேற்பு முதல்வர் அமரீந்தரும் விழாவில் பங்கேற்பு
சண்டிகர்:பஞ்சாபில் இன்று மாநில காங்., தலைவராக நவ்ஜோத் சிங் சித்து பொறுப்பேற்கும் விழாவில் முதல்வர் அமரீந்தர் சிங் பங்கேற்க உள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. முதல்வர் அமரீந்தருக்கும், மாநில முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்., தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். மேலும், நான்கு செயல் தலைவர்களும் அப்போது நியமிக்கப்பட்டனர்.
அமரீந்தரின் எதிர்ப்பை மீறி சித்து நியமிக்கப்பட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. பின் இருவரின் சந்திப்பும் நிகழும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் தன்னை அவதுாறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை, சித்துவை சந்திக்கப்போவது இல்லை என, அமரீந்தர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.இதற்கிடையே மாநில காங்., தலைவராக சித்து இன்று பொறுப்பேற்க உள்ளார். அந்த விழாவில், அமரீந்தருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில காங்., செயல் தலைவர்களான குல்ஜித் சிங் நாக்ரா மற்றும் சங்கத் சிங் கில்ஜியான் ஆகியோர் அமரீந்தர் சிங்கை சந்தித்தனர். பண்ணை வீட்டில் நடந்த சந்திப்பில் அமரீந்தருக்கு விழாவில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப் பட்டது.
இது குறித்து நாக்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:பஞ்சாப் மாநில காங்., தலைவர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் முதல்வருக்கு அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளது. அழைப்பை ஏற்றுள்ள முதல்வர் அமரீந்தர் சிங், சித்துவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று, ஆசி வழங்க வருகை தர உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. முதல்வர் அமரீந்தருக்கும், மாநில முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்., தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். மேலும், நான்கு செயல் தலைவர்களும் அப்போது நியமிக்கப்பட்டனர்.
அமரீந்தரின் எதிர்ப்பை மீறி சித்து நியமிக்கப்பட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. பின் இருவரின் சந்திப்பும் நிகழும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் தன்னை அவதுாறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை, சித்துவை சந்திக்கப்போவது இல்லை என, அமரீந்தர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.இதற்கிடையே மாநில காங்., தலைவராக சித்து இன்று பொறுப்பேற்க உள்ளார். அந்த விழாவில், அமரீந்தருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில காங்., செயல் தலைவர்களான குல்ஜித் சிங் நாக்ரா மற்றும் சங்கத் சிங் கில்ஜியான் ஆகியோர் அமரீந்தர் சிங்கை சந்தித்தனர். பண்ணை வீட்டில் நடந்த சந்திப்பில் அமரீந்தருக்கு விழாவில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப் பட்டது.
இது குறித்து நாக்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:பஞ்சாப் மாநில காங்., தலைவர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் முதல்வருக்கு அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளது. அழைப்பை ஏற்றுள்ள முதல்வர் அமரீந்தர் சிங், சித்துவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று, ஆசி வழங்க வருகை தர உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!