Load Image
Advertisement

ஆண்குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்ற தாய் கைது

 ஆண்குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்ற தாய் கைது
ADVERTISEMENT
வந்தவாசி: வந்தவாசி அருகே ஆண் குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்த வழக்கில் தாய் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் சரத்குமார் (29), பவானி(27) ஆகிய இருவரும் காதலர்கள். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பவானி பணியாற்றி வந்தார். இதனால், சரத்குமாரும் அங்கேயே சென்று திருமணம் செய்து கொள்ளாமல் தம்பதியாக வாழ்ந்து வந்தனர். அதில், அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தனது குழந்தையை காதலன் கடத்தி விற்றுவிட்டதாக வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் பவானி புகார் அளித்துள்ளார்.

Latest Tamil News

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் (ஜூன் 27) குழந்தையை மீட்டனர். மேலும், இதுதொடர்பாக தந்தை சரத்குமார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சரத்குமாரிடம் நடத்திய விசாரணையில், தாய் பவானியும் சேர்ந்து ரூ.3.60 லட்சத்திற்கு குழந்தையை விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து, தாய் உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர். திருமணம் செய்யாமல் குழந்தையை பெற்றெடுத்த தாய், தந்தையரே குழந்தையை விற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (6)

  • ஆப்பு -

    இதுல என்ன பரபரப்பு? அந்த தம்பதியினருக்கு வேலை போயிருக்கும். குழந்தையை யாருக்கும் தத்துக் குடுக்க விடாமல் ஆயிரம் முட்டுக்கட்டைகள் போடும் அரசாங்கம். அவிங்களுக்கு நல்க வேலை வாய்ப்பைக் குடுக்க முடியாத அரசுகள். ஏதோ சட்டத்தைப் போட்டு கைது செய்கின்றன.

  • Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்

    அந்த குழந்தையை யாராவது தத்து எடுத்திருந்தால் அவர்களிடமே விட்டு விடலாம் .திருட்டு தாய் தந்தையரை விட அநாதை விடுதிகளை விட அவர்கள் நன்றாகவே பார்த்துக்கொள்வார்கள் . சிங்கப்பூரில் இதுபோன்று மணமாகாமல் பிறந்து காப்பகத்தில் விடப்பட்டு இந்திய இங்கிலாந்து குடி மக்கள் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியரால் தத்து எடுக்கப்பட்டு தற்பொழுது மிக பாசத்துடன் வளர்க்கப்படுகிறான் அவன் பத்தாவது பிறந்த நாளை கொண்டாட முடியவில்லையே ( Covid Lockdown காரணமாக ) என்று அவன் வளர்ப்புத்தாய் ( இங்கிலாந்து குடி மகள்) என் மனைவியிடம் நெஞ்சுருக அழுதது இப்போதும் கண் முன் நிற்கிறது

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இனி அந்த குழந்தை அந்த 'திருட்டு' போலி பெற்றோர்களிடம் வளர்வது சரியல்ல. அந்த குழந்தையை ஏதாவது ஒரு சிறந்த குழந்தைகள் காப்பகத்தில் அல்லது ஆசிரமத்தில் விட்டு வளர்ப்பதுதான் சிறந்தது. இல்லையென்றால், இந்த போலி பெற்றோர்கள் அந்த குழந்தையை கொன்றுவிடுவார்கள். ஜாக்கிரதை.

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

    சரத்குமார் திருட்டு திமுக உறுப்பினரா என்று தீர விசாரிக்கவும். வாய்ப்புகள் அதிகம்.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    குழந்தையும் சாதாரன விற்கும் பொருளாக மாறினது காலத்தின் கொடுமை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement