Load Image
Advertisement

அருப்புக்கோட்டையில் புதுப்பெண் பலி : உடல் உறுப்புகள் தானம்

  அருப்புக்கோட்டையில்  புதுப்பெண் பலி :  உடல் உறுப்புகள் தானம்
ADVERTISEMENT
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம். ரெட்டியபட்டி அருகே மறவர் பெருங்குடியை சேர்ந்த சங்கர்ராஜ் 32 , மனைவியான சுத்தமடத்தை சேர்ந்த முத்துமாரி 24, திருமணமான 4 வது நாளில் விபத்தில் இறந்த நிலையில்,அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்தனர்.


கோயமுத்துாரில் சேல்ஸ் எக்சிகியூடிவ் ஆக உள்ள சங்கர்ராஜ் , முத்துமாரியை ஜூன் 13 ல் திருமணம் செய்தார். இவர்கள் 16 ல் பந்தல்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்று திரும்பினர். நிலைதடுமாறி கீழே விழுந்த முத்துமாரி மதுரை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு 17ல் இறந்தார். இறப்பதற்கு முன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக கூறியதையடுத்து, அவரது கிட்னி, இருதயம் , நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை குடும்பத்தார் தானமாக வழங்கினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement