ADVERTISEMENT
காஞ்சிபுரம்-ஒருங்கிணைந்த மாவட்டத்தில், கால்நடைகளுக்கு, 'இன்சூரன்ஸ்' செலுத்தும் பயனாளிகள், அந்தந்த பகுதி கால்நடை மருத்துவர்களிடம் விபரம் கேட்டு, பணம் செலுத்தலாம் என, மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 4.70 லட்சம் கால்நடைகள் உள்ளன. கால்நடை விவசாயிகள் சிலர், தங்கள் மாடுகளுக்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளனர். அவர்கள், நடப்பாண்டு செலுத்த வேண்டிய பிரீமிய தொகையை விரைவில் செலுத்துமாறு, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் நடராஜகுமார் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு, 1,918 கால்நடைகள், செங்கல்பட்டு மாவட்டத்தில், 3,082 கால்நடைகளுக்கு, பிரீமியம் தொகை செலுத்தப்பட உள்ளது.பொதுப்பிரிவில் உள்ள பயனாளிகள், பிரீமிய தொகையில், 50 சதவீதமும், தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், 70 சதவீதமும் கட்டினால் போதுமானது. ஒரு பயனாளி, அதிகபட்சமாக, ஐந்து மாடுகளுக்கு பாலிசி எடுக்கலாம்.அந்தந்த பகுதி கால்நடை மருத்துவரை அணுகி, விபரம் கேட்டு பணம் செலுத்தலாம். அவர்கள், சம்பந்தப்பட்ட துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.இன்சூரன்சுக்கான பிரீமிய தொகை செலுத்தினால், எதிர்பாராதவிதமாக கால்நடை இறந்தால், அதற்கான இழப்பீட்டு தொகையை, காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!