ADVERTISEMENT
வண்ணாரப்பேட்டை-ஜவுளிக்கடைகள் திறக்கப்படாததால், 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.
வண்ணாரப்பேட்டையில், ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகி சரவணன், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:சென்னையில் கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்துள்ளதால், அரசு தளர்வுகள் அளித்து, பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், ஜவுளி கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை, எம்.சி., ரோட்டில், 2,000த்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், ஊரடங்கு தடை உத்தரவால், 45 நாட்களாக மூடப்பட்டுள்ளன.இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும், 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 நாட்கள் ஜவுளி கடை மூடப்பட்டிருப்பதால், 1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., பணியாளர்கள் சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட கட்டணங்களை கட்ட முடியாமல், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம்.கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசு முதன்மை செயலர், மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம். அரசு வழிமுறைகளான கிருமி நாசினி பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முக கவசத்துடன் வாடிக்கையாளர்களை அனுமதிப்பது என, அனைத்து விதிகளையும் பின்பற்றுவோம்.ஜவுளி கடைகளை திறக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
வண்ணாரப்பேட்டையில், ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகி சரவணன், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:சென்னையில் கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்துள்ளதால், அரசு தளர்வுகள் அளித்து, பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், ஜவுளி கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை, எம்.சி., ரோட்டில், 2,000த்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், ஊரடங்கு தடை உத்தரவால், 45 நாட்களாக மூடப்பட்டுள்ளன.இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும், 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 நாட்கள் ஜவுளி கடை மூடப்பட்டிருப்பதால், 1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., பணியாளர்கள் சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட கட்டணங்களை கட்ட முடியாமல், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம்.கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசு முதன்மை செயலர், மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம். அரசு வழிமுறைகளான கிருமி நாசினி பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முக கவசத்துடன் வாடிக்கையாளர்களை அனுமதிப்பது என, அனைத்து விதிகளையும் பின்பற்றுவோம்.ஜவுளி கடைகளை திறக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தீபாவளி ,பொங்கல் வரிசையா வரும், பெர்த் டே ,சால்வை கட்சிகார்கள் வருவாங்க கவலை படாதீங்க ...உங்க ஊழியர்கள் எப்படி இருக்காங்கன்னு பார்த்தீங்களா உரிமையாளர்களே ....உங்களுக்கு லாபம் நிச்சயம் , கரண்ட் பில், சம்பளம் மிச்சம் ரெடியா இருங்க லாபம் பார்க்க .வாழ்த்துக்கள் ..அப்ப்டியே சம்பளம் பாக்கி வைக்காம சேல்ஸ் பசங்களையும் பாருங்க சாமிகளா .