ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மளிகை தொகுப்பு பொருட்கள் உரிய எண்ணிக்கையில் அனுப்புவதில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்றதும் மே மாதம் முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.இரண்டாம் கட்டமாக 2,000 ரூபாயுடன், சர்க்கரை, கோதுமை மாவு, உப்பு, ரவை, உளுத்தம் பருப்பு, புளி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் தாலுகாவில் 55 ஆயிரத்து 883, கள்ளக்குறிச்சி தாலுகாவில் 83 ஆயிரத்து 115, கல்வராயன்மலை தாலுகாவில் 14 ஆயிரத்து 316, சங்கராபுரம் தாலுகாவில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 30, திருக்கோவிலுார் தாலுகாவில் 60 ஆயிரத்து 743, உளுந்துார்பேட்டை தாலுகாவில் 85 ஆயிரத்து 761 என மொத்தம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 848 கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்கள் வழங்கப்படுகிறது. இது தவிர அகதிகள் முகாமில் உள்ள 75 கார்டுகளுக்கும் வழங்கப்படுகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 766 முழு மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக தேதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.தொடர்ந்து, நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கும் பணி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி துவங்கியது. மாவட்டத்தில் உள்ள கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கேற்ப பொருட்கள் முழுமையாக வரவில்லை.இதனால் உரிய நேரத்தில் பொருட்களை வழங்க முடியாமல் ரேஷன் ஊழியர்கள் தவிக்கின்றனர். மேலும், மளிகை பொருட்கள் தொகுப்பில், 14 வகையான பொருட்கள் இல்லை என புகார் எழுந்துள்ளது. அதனடிப்படையில் ரேஷன் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர்.இகுறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறியதாவது:தமிழக அரசு அறிவித்த 14 வகையான பொருட்களும் பேக்கிங் செய்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு மொத்தமாக வந்தது. அங்கு பொருட்களை தனி, தனியாக பிரித்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது.இதில், மளிகை பொருட்களின் தொகுப்பில், பொருட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பும்போது பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது.அதாவது, ஒரு கடையில் 500 ரேஷன் கார்டுகள் என்றால், அரசு அனுப்பிய தொகுப்பில் 495 கார்டுகளுக்கு மட்டுமே இருக்கிறது. இருக்கும் பொருட்களை விநியோகம் செய்தால், மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில் உரிய விசாரணை ஏதுமின்றி ரேஷன் விற்பனையாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர். மேலும், மாவட்டத்தில் ஒரு சில கடைகளுக்கு பொருட்கள் கிடைக்கவே இல்லை.எனவே, அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்களை சரியான எண்ணிக்கையில் வழங்க வேண்டும்' என ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்றதும் மே மாதம் முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.இரண்டாம் கட்டமாக 2,000 ரூபாயுடன், சர்க்கரை, கோதுமை மாவு, உப்பு, ரவை, உளுத்தம் பருப்பு, புளி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் தாலுகாவில் 55 ஆயிரத்து 883, கள்ளக்குறிச்சி தாலுகாவில் 83 ஆயிரத்து 115, கல்வராயன்மலை தாலுகாவில் 14 ஆயிரத்து 316, சங்கராபுரம் தாலுகாவில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 30, திருக்கோவிலுார் தாலுகாவில் 60 ஆயிரத்து 743, உளுந்துார்பேட்டை தாலுகாவில் 85 ஆயிரத்து 761 என மொத்தம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 848 கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்கள் வழங்கப்படுகிறது. இது தவிர அகதிகள் முகாமில் உள்ள 75 கார்டுகளுக்கும் வழங்கப்படுகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 766 முழு மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக தேதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.தொடர்ந்து, நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கும் பணி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி துவங்கியது. மாவட்டத்தில் உள்ள கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கேற்ப பொருட்கள் முழுமையாக வரவில்லை.இதனால் உரிய நேரத்தில் பொருட்களை வழங்க முடியாமல் ரேஷன் ஊழியர்கள் தவிக்கின்றனர். மேலும், மளிகை பொருட்கள் தொகுப்பில், 14 வகையான பொருட்கள் இல்லை என புகார் எழுந்துள்ளது. அதனடிப்படையில் ரேஷன் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர்.இகுறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறியதாவது:தமிழக அரசு அறிவித்த 14 வகையான பொருட்களும் பேக்கிங் செய்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு மொத்தமாக வந்தது. அங்கு பொருட்களை தனி, தனியாக பிரித்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது.இதில், மளிகை பொருட்களின் தொகுப்பில், பொருட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பும்போது பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது.அதாவது, ஒரு கடையில் 500 ரேஷன் கார்டுகள் என்றால், அரசு அனுப்பிய தொகுப்பில் 495 கார்டுகளுக்கு மட்டுமே இருக்கிறது. இருக்கும் பொருட்களை விநியோகம் செய்தால், மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில் உரிய விசாரணை ஏதுமின்றி ரேஷன் விற்பனையாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர். மேலும், மாவட்டத்தில் ஒரு சில கடைகளுக்கு பொருட்கள் கிடைக்கவே இல்லை.எனவே, அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்களை சரியான எண்ணிக்கையில் வழங்க வேண்டும்' என ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து (3)
மடிபாக்கத்தில் உள்ள ரேஷன் கடையில் தவறுகள்: 1. கடையில் கட்சி பேர் மாட்டியது. 2. 17.6.21 அன்று 200 க்கு பதிலாக 100 பேருக்குமட்டும் பொருள்கள் கொடுத்ததால் மறு நாள் கூட்டம் அதிகரிப்பு .
இத்தகைய திட்டங்கள் கட்சிக்காரன் கள் கொள்ளை அடித்து பிழைப்பதற்காகவே கொண்டுவர படுகின்றன அனைத்தையும் சரியாக கொடுத்து விட்டால் கொள்ளை அடிப்பது எப்படி சென்ற ஆட்சியில் பொங்கல் பரிஸில் பாதி பேருக்கு சர்க்கரை கரும்பு மந்திரி வழங்கப்படவில்லை எந்த ஆட்சி வந்தாலும் கொள்ளை அடிப்பது நிற்காது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
விடியல் வரும்போது இதெல்லாம் சகசம். கொடுக்கறதை வாங்கிக்கிட்டு ... . போவீங்களா.... அதை வுட்டு புட்டு.... .தூங்கிகிட்டு இருக்கிற சிங்கத்தை சொரண்டி பாக்காதீங்க