புதுடில்லி: டில்லி விவசாயிகள் நடத்தும் பேரணியில் ஆங்காங்கே சில வன்செயல்கள் நடக்க துவங்கி உள்ளன . பல இடங்களில் கண்ணீர்புகை வீசி கூட்டத்தினரை கலைத்தனர். சில இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது. காயமுற்றவர்கள் குறித்த விவரம் ஏதும் வெளிய வரவில்லை. டில்லியில் மேலும் வன்முறை வெடிக்குமோ என்ற அச்சச்சூழல் எழுந்துள்ளது.
தற்போது, போலீசார் அனுமதி வழங்கிய பகுதியில் செல்லாமல், தடையை மீறிய விவசாயிகள், டில்லி செங்கோட்டைக்குள் நுழைந்துள்ளனர். அங்கு, அவர்கள் தங்களது அமைப்பின் கொடியை ஏற்றினர். இதனையடுத்து அங்குவிரைந்த போலீசார், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். தொடர்ந்து, அங்கு துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
வன்முறையை தொடர்ந்து, சிங்கு, காசிப்பூர், டிக்ரி, முகர்பா சவுக், நங்கோலாய் பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை தடை அமலில் இருக்கும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினமான இன்று (ஜன.,26), டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் டில்லி நோக்கி படையெடுத்தனர். குடியரசு தினத்தை சீர்குலைக்க கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் டிராக்டர் பேரணிக்கு டில்லி போலீசார் அனுமதியளித்தனர்.
விவசாய சங்கங்கள், குடியரசு தின விழா முடிந்தபிறகு பகல் 11:30க்கு பேரணி துவங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் முன்னதாகவே 9 மணியளவில் சிங்கு எல்லையிலிருந்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை விவசாயிகள் துவக்கினர். கஞ்சவாலா சொவுக் - ஆச்சண்டி எல்லை வரையில் பேரணி துவங்கியது.
டில்லி -ஹரியானா எல்லைப்பகுதியான டிக்ரி பகுதியில் போலீசார் அமைத்த தடுப்புகளை தகர்த்தனர் . குடியரசு தினத்தில் நாட்டின் தலைநகரில் கிட்டத்தட்ட 2 லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடந்துவருவதால் பதற்றம் நிலவுகிறது.
டில்லிக்கு நுழைய சஞ்சய்காந்தி போக்குவரத்து நகர் வழியாக வந்த விவசாயிகள் தடுப்புகளை அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை வீசி கலைத்தனர். மேலும் சில இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது.
சரியான பாடம் புகட்ட வேண்டும் இந்த வன்முறை போராளிகலுக்கு.... மோடிஜி marthoo
yaru than nalla money wise wealthy ah iruka vivasayi iruka sollunga avangala vachi arasiyal pandravanga than nalla wealthy ah um healthy ah um irukanga elathukum arasiyal elathayum arasiyal akuranga namma india la enga yara nalla iruka viduranga sollunga
65 நாட்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் இப்பொழுது வன்முறையில் இரங்கி விட்டார்களா? இதுவும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல அரசு பயங்கரவாதத்துடன் முடிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு எவ்வளவு நாள் ஆட்டம் போடணுமா போட்டு கொள்ளுங்கள். யாரும் 100 வருடம் ஆண்டதாக சரித்திரம் இல்லை.
போராட்டக்காரர்கள் தளர கூடாது முடிந்தால் ஜனாதிபதி வீடு / பிரதமர் வீடு முற்றுகை இட வேணும் அப்போ தான் அடஙுகுவார்கள்
வேண்டாம் என்று மறுக்கும்
குழந்தைகளுக்குக்கூட
உணவைத் திணிக்க இயலாது.
நாட்டிற்கே
உணவளிக்கும்
விவசாயிகள் ஏற்பார்களா?
ஏற்கும் வகையில்
இயற்றப்பட
வேண்டியதுதான் சட்டம்.
எதிர்க்கும் வகையில் அல்ல.
ஒரு நாளைக்கு 18 மணி நேரம்
வேலை பார்க்கும் ஒருவரால்
61 × 18 = 1080 மணி உழைப்பில் சற்று நேரம் இந்தப் பிரச்சினையில் தலையிட இயலவில்லையா?
4 லட்சம் பேரின் எதிர்ப்பை, வலியை உணர முடியாமல் போனது எதனால்?
ஒரு வேளை காளான் மட்டுமே உண்கிறாரோ?
சரியான பாடம் புகட்ட வேண்டும் இந்த வன்முறை போராளிகலுக்கு.... மோடிஜி marthoo