இந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 1.02 கோடியை நெருங்கியது
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்து 96 ஆயிரத்தை கடந்தது.
மேலும் ஒரே நாளில் 15,144 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது. 2.08 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,52,274 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 96.58 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.44 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.98 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் ஒரே நாளில் 15,144 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது. 2.08 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,52,274 பேர் உயிரிழந்துள்ளனர்.

சோதனைகள்
இந்தியாவில் நேற்று (ஜன.,16) ஒரே நாளில் 7,79,377 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 18 கோடியே 65 லட்சத்து 44 ஆயிரத்து 868 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!