கோவை, தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கியதும், அதில் பங்கேற்றவர்களின் கருத்துகளை ஸ்டாலின் கேட்டார்.
பதில் சொல்ல முடியாது
தொடர்ந்து அந்த பெண், ‛‛திமுக எதையும் செய்யவில்லை. கிராம சபை கூட்டம் நடத்துவது ஏன்'' என கோஷம் போட்டு கொண்டு வெளியேறினார். வெளியில் இருந்த திமுகவினர், அந்த பெண்ணையும், போலீசாரையும் தாக்கினர். இதில் போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளில் திமுகவினர் கடுமையாக திட்டினர்.
நடத்த விட மாட்டோம்
இதன் பின்னர் ஸ்டாலின் பேசியதாவது:
திமுக கட்டுப்பாடு உள்ள இயக்கம். அந்த பெண்ணை கண்டுபிடித்து எந்த பிரச்னையும் இல்லாமல் அனுப்பி வைத்தும். வேலுமணி அவர்களே, இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள். இது போன்று நாங்கள் செய்தால், நீங்கள் மட்டுமல்ல முதல்வரே கூட்டம் நடத்த முடியாது. இது தான் மரியாதை. உங்களுக்கு தைரியம் இல்லை. திமுக தொப்பியை மாட்டி கொண்டு, தைரியம் இருந்தால், அதிமுக என கூறி அமர்ந்திருக்க வேண்டும்.இந்த கூட்டத்தை தடுக்க வேலுமணி முயற்சி செய்வது நேற்றே எனக்கு தெரியும். ஒரு கூட்டத்தை தடுக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால், எந்த கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
சாலை மறியல்
இதனிடையே, ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண்ணின் பெயர் பூங்கொடி என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் பாதுகாப்புடன் போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர், தொண்டாமுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்துள்ளனர். அதிமுகவினரை கண்டித்து திமுகவினரும் தொண்டாமுத்தூரில் மற்றொரு இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
வாசகர் கருத்து (212)
ஒரு பெண் கேள்வி கேட்டால் பதில் சொல்ல படித்திருக்க வேண்டும், கேள்வி ஞானம் வேண்டும். பொறுமை வேண்டும். திறமை வேண்டும். சுடலைஜிஇ டம் இவற்றை எதிர்பார்த்தது ஏமாந்திருக்கிறார் இந்த பெண்.
மக்கள் கொடுக்கும் வரி பணத்தில் தான் இன்று பொங்கல் பணம் கொடுக்கப்படுகிறது . இதில் ஆட்சியாளர்கள் ADMK கொடுத்தது போல் ADMK token கொடுக்கிறர்கிளே இதை யாரும் கேள்வி கேட்க மாட்டேங்கிறாங்கள்( ஊடகங்ககளும் சேர்த்து தான்) .
தமிழர்கள் நாகரீகமானவர்கள். பீகார் மற்றும் உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போல கூட்டத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள். பேச்சு பேச்சா இருக்கணும்னு நம்புவார்கள்.
வேலுமணி அனுப்சா என்ன பிச்சுமணி அனுப்பிச்சா என்ன? கூட்டம் கூட்டுவது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான்... ஹி ஹி.. இப்பம் புரியுதா உள்குத்து வெச்சி ஆள் வெச்சி கூட்டத்துல கலகம் பண்றது மத்தவங்களுக்கும் வரும்னு... ஹ்ம்ம்.. முள்ள முள்ளால எடுக்கற டெக்குநீக்கு இது....
எனக்கு ஒன்றும் புரியவில்லை மக்கள் கிராம சபை என்றால் எல்ல மக்களும் கலந்துகொண்டு கருத்துக்களை சொல்வது தானே .இதில் ஏன் மாற்று கருத்தை சொல்லக்கூடாது .