தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறியதாவது: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நீடிக்கக்கூடும்.

இதன்காரணமாக
இன்று(05.12.2020)
கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக மழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
06.12.2020:
ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக மழையும், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
மழையளவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)
கொத்தவச்சேரி (கடலூர்) 19,
நாகப்பட்டினம், காரைக்கால் தலா 16 ,
குடவாசல் (திருவாரூர்), புவனகிரி (கடலூர்) தலா 15,
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 14,
தரங்கம்பாடி 13,
சீர்காழி (நாகப்பட்டினம்), டிஜிபி அலுவலகம் (சென்னை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 12,
ராமேஸ்வரம் , அண்ணா பல்கலை , திருப்பூண்டி (நாகப்பட்டினம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 11,
ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கொள்ளிடம், எம் ஜி ஆர் நகர் (சென்னை) தலா 10, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), தூத்துக்குடி, தலைஞாயிற் (நாகப்பட்டினம்), சிதம்பரம் (கடலூர்) தலா 9
மீனவர்களுக்கான எச்சரிக்கை
டிசம்பர் 05 :
குமரிக்கடல் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
டிசம்பர் 05 ,06: கேரள கடலோர பகுதி , லத்தச்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 07:
கேரள கடலோர பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல்,லத்தச்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்
கடல் அலை
வடதமிழக கடலோர பகுதிகளில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை 05.12.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலை 1.5 முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 05.12.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலை 1.2 முதல் 3.2 மீட்டர் வரை எழும்பக்கூடும். இவ்வாறு அவர் கூறினார.
வருடம் 2020 கொரானா வைரஸுடன் துவங்கி நாட்டு மக்களையே, ஏன் உலகமக்களையே பாதித்தது. வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. வருடம் முடிய போகிறது. முடியும் நேரத்தில் இப்படி புயல்கள் வொவொன்றாக தாக்கி தமிழக மக்களை பாதிக்கிறது. போகட்டும். வருடம் 2021 ஆவது எந்தவித பாதிப்பு இல்லாத வருடமாக உதிக்குமா?