மின் வாகனங்களின் யுகம் பிறந்துவிட்டது. எனவே, அவற்றின் உந்து சக்தியாக இருக்கும் மின்கலன்களின் தொழில்நுட்பத்திலும் புதுமைகள் வரத் தொடங்கிவிட்டன. ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு ஆராய்ச்சிக் குழுவினர், நீல நிற தாது ஒன்றை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
கடந்த, 2013ல் டோல்பாசிக் எரிமலை வெடித்தபோது கிடைத்த அரிய தாது இது. சோடியம் சல்பர், தாமிரம் மற்றும் மிக விநோத மூலக்கூறு அமைப்பைக் கொண்ட ஆக்சிஜன் ஆகியவை கலந்த கலவை இந்த தாது.
இதை பயன்படுத்தினால், சோடியம் அயனி மின்கலன்களில் உள்ள சிக்கலை எளிதில் தீர்க்கும் திறன் கொண்டது என்று ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'பெட்ரோவைட்' என்ற இந்த தாதுவினால் செய்யப்பட்ட மின்கலன்களால், அதிக மின் ஆற்றலை, அதிக நேரத்திற்கு சேமித்து வைக்க முடியும்.
கடந்த, 2013ல் டோல்பாசிக் எரிமலை வெடித்தபோது கிடைத்த அரிய தாது இது. சோடியம் சல்பர், தாமிரம் மற்றும் மிக விநோத மூலக்கூறு அமைப்பைக் கொண்ட ஆக்சிஜன் ஆகியவை கலந்த கலவை இந்த தாது.
இதை பயன்படுத்தினால், சோடியம் அயனி மின்கலன்களில் உள்ள சிக்கலை எளிதில் தீர்க்கும் திறன் கொண்டது என்று ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'பெட்ரோவைட்' என்ற இந்த தாதுவினால் செய்யப்பட்ட மின்கலன்களால், அதிக மின் ஆற்றலை, அதிக நேரத்திற்கு சேமித்து வைக்க முடியும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!