டிப்பர் லாரி மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற தம்பதி சாவு
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, டிப்பர் லாரி மோதியதில், மொபட்டில் சென்ற கணவன், மனைவி இருவரும் பலியாகினர். கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் அருகே உள்ள, வெத்தலை தோட்டத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன், 52; இவரது மனைவி சித்ரா, 40; இவர்கள் இருவரும், ஐகுந்தம் அடுத்த ஒட்டனூரில் உள்ள, தங்கள் மகள் வீட்டிற்கு நேற்று காலை, 11:30 மணிக்கு, சூப்பர் எக்ஸ்.எல்., மொபட்டில் சென்றனர். ஐகுந்தம் அடுத்த அனகோடி அருகே, எதிரே வந்த டிப்பர் லாரி, கிருஷ்ணன் சென்ற, இருசக்கர வாகனத்தின் மீது, நேருக்கு நேராக மோதியது. இதில், லாரியின் அடியில் சிக்கிய கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். டிப்பர் லாரி டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலின்படி வந்த, பர்கூர் போலீசார், பலியான தம்பதியின் உடல்களை மீட்டு, விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!