Load Image
Advertisement

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

ஓசூர்: ஓசூர் அடுத்த பாகலூர் சர்க்கிள் பகுதியில், கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இலவசமாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ஓசூர் தாசில்தார் செந்தில்குமார், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசிவெங்கடசாமி ஆகியோர், பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினர். அப்போது, முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடந்தால், கொரோனாவை விரட்ட முடியும் என, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் நாராயணசாமி, பெலத்தூர் பஞ்., தலைவர் முனிராஜ், மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement