Load Image
Advertisement

செங்கல்லை படைக்கும் பாக்டீரியா!

 செங்கல்லை படைக்கும் பாக்டீரியா!
ADVERTISEMENT
புகை கக்கும் சூளை இல்லாமல், சித்தாள்கள் இல்லாமல் செங்கற்களை தயாரிக்க முடியுமா? முடியும் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள கொலராடோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.

எப்படி? பாக்டீரியாக்களின் உதவியுடன்தான்! மணல், ஹைட்ரோஜெல் கலவையுடன் ஒரு வகை பாக்டீரியாவையும் கலந்து, ஒரு வார்ப்பில் போட்டுவிட்டால், பாக்டீரியாக்கள், சுற்றியுள்ள கார்பன் - டை - ஆக்சைடு வாயுவை உட்கொண்டு, கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதிப் பொருள் ஹைட்ரோஜெல்லையும் மணலையும் பிணைக்கும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது.

இதனால், வார்ப்பில் உள்ள மணல் மற்றும் ஹைட்ரோஜெல் கலவை மெல்ல மெல்ல இறுகி செங்கல்லாக மாறுகிறது.

சொல்லப்போனால், பாக்டீரியாக்கள் இனப் பெருக்கம் செய்து, மேலும் கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்து தள்ளுவதால், வார்ப்பின் பாதி அளவு மணல்- ஹைட்ரோஜெல் கலவை இருந்தாலே கூட, அதை பெருக்கி வார்ப்பு முழுவதையும் நிரப்பிவிடுகின்றன.

பாதியாக உடைக்கப்பட்ட பாக்டீரியா செங்கல், மேலும், 'வளர்ந்து' எட்டு முழு கற்களை உருவாக்க முடியும் என, விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இன்னும் சோதனையில் இருக்கும் இந்த உயிரி தொழில்நுட்பம் கட்டுமானத் தொழிலில் ஒரு புரட்சியை உருவாக்கவிருக்கின்றன.


வாசகர் கருத்து (1)

  • Nathan - Hyderabad,இந்தியா

    கட்டிடம் வளர்ந்து இஷ்டப்படி பெருக்குமோ? சுவாசிக்கும் தயாரிப்பு தொழிலாளிக்கு வகை தெரியாமல் உப்ப வைக்குமா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement