ADVERTISEMENT
மதுரை : மதுரையிலிருந்து நேற்று சென்னை, பெங்களூரு சென்ற ரயில்களில் கூட்டம் அதிகமிருந்ததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். பண்டிகை நாட்களிலாவது கூடுதல் ரயில்களை இயக்க நிர்வாகம் முன்வர வேண்டும்.
பொங்கல் கொண்டாட சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர். விடுமுறை முடிந்து நேற்று அவர்கள் சென்னை, பெங்களூரு புறப்பட்டு சென்றனர். ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அதிகம் கூட்டம் இருந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். பலர் ரயில்களில் ஏறுவதை தவிர்த்து பஸ்களில் சென்றனர். மதுரையிலிருந்து சென்னைக்கு பகலில் வைகை, குருவாயூர், இரவில் பாண்டியன், முத்துநகர், நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற வழக்கமான ரயில்கள் உள்ளன. நேற்று பொங்கலையொட்டி ஒரே ஒரு சிறப்பு ரயில் மட்டும் நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்பட்டது.
பெங்களூருக்கு வழக்கமான பகல், இரவு இயங்கும் தலா ஒரு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆம்னி பஸ்களுடன் ஒப்பிடுகையில் ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சரக்கு பெட்டிகளிலும் பயணிகள் ஏறிச் சென்றனர். பயணிகள் கூறியதாவது: பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலாவது கூடுதல் ரயில்களை நிர்வாகம் இயக்க வேண்டும். இரவு ரயில் போக்குவரத்து அதிகம் இருப்பதாக கருதினால் பகல் நேர ரயில்களை இயக்கலாம். வைகை, பாண்டியன் உள்ளிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகளையாவது இணைக்கலாம் என்றனர்.
பொங்கல் கொண்டாட சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர். விடுமுறை முடிந்து நேற்று அவர்கள் சென்னை, பெங்களூரு புறப்பட்டு சென்றனர். ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அதிகம் கூட்டம் இருந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். பலர் ரயில்களில் ஏறுவதை தவிர்த்து பஸ்களில் சென்றனர். மதுரையிலிருந்து சென்னைக்கு பகலில் வைகை, குருவாயூர், இரவில் பாண்டியன், முத்துநகர், நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற வழக்கமான ரயில்கள் உள்ளன. நேற்று பொங்கலையொட்டி ஒரே ஒரு சிறப்பு ரயில் மட்டும் நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்பட்டது.
பெங்களூருக்கு வழக்கமான பகல், இரவு இயங்கும் தலா ஒரு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆம்னி பஸ்களுடன் ஒப்பிடுகையில் ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சரக்கு பெட்டிகளிலும் பயணிகள் ஏறிச் சென்றனர். பயணிகள் கூறியதாவது: பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலாவது கூடுதல் ரயில்களை நிர்வாகம் இயக்க வேண்டும். இரவு ரயில் போக்குவரத்து அதிகம் இருப்பதாக கருதினால் பகல் நேர ரயில்களை இயக்கலாம். வைகை, பாண்டியன் உள்ளிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகளையாவது இணைக்கலாம் என்றனர்.
வாசகர் கருத்து (2)
ரிசர்வேஷன் இல்லாமல் சில வண்டிகள் இயக்கப்பட வேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இனி சென்னை முதல் தூத்துக்குடி வரை கடல் மூலம் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யவேண்டும்.இதன் மூலம் பெருமளவு நெரிசலை தவிர்க்கலாம்.எல்லாரும் அமர்ந்து அல்லது உறங்கி செல்லலாம். கப்பலில் ரயிலில் செல்வதை விட பஸ்ஸில் செல்வதை விட அதிக ஆட்கள் செல்ல முடியும் என நினைக்கிறேன். வருங்காலத்தில் இப்படி செய்வது தான் நல்லது.