மாநில ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டி: ஈரோடு அணி சாம்பியன்
கிருஷ்ணகிரி: மாநில அளவில், ஜூனியர் மகளிருக்கான ஹாக்கி போட்டியில், ஈரோடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில், மாவட்ட ஹாக்கி யூனிட் சார்பில், மாநில அளவிலான ஜூனியர் மகளிருக்கான ஹாக்கி போட்டிகள் கடந்த, 5ல் துவங்கின. இதில், 28 மாவட்ட அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதி போட்டியில், ஈரோடு-தஞ்சாவூர் அணிகள் விளையாடின. ஈரோடு அணி, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில், திருவண்ணாமலை-திருச்சி அணிகள் விளையாடியதில், திருவண்ணாமலை அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இறுதிப்போட்டியில், ஈரோடு- திருவண்ணாமலை அணிகள் விளையாடின. அதில், ஈரோடு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற ஈரோடு அணிக்கு, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் செயலாளர் ரேணுகா லட்சுமி பரிசு வழங்கினார். முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இங்கு நடந்த போட்டிகள் மூலம், 50 பேர் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் பயிற்சி பெற உள்ளனர். அதில், 20 வீரர்களை தேர்வு செய்து, அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளனர்.
கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில், மாவட்ட ஹாக்கி யூனிட் சார்பில், மாநில அளவிலான ஜூனியர் மகளிருக்கான ஹாக்கி போட்டிகள் கடந்த, 5ல் துவங்கின. இதில், 28 மாவட்ட அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதி போட்டியில், ஈரோடு-தஞ்சாவூர் அணிகள் விளையாடின. ஈரோடு அணி, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில், திருவண்ணாமலை-திருச்சி அணிகள் விளையாடியதில், திருவண்ணாமலை அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இறுதிப்போட்டியில், ஈரோடு- திருவண்ணாமலை அணிகள் விளையாடின. அதில், ஈரோடு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற ஈரோடு அணிக்கு, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் செயலாளர் ரேணுகா லட்சுமி பரிசு வழங்கினார். முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இங்கு நடந்த போட்டிகள் மூலம், 50 பேர் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் பயிற்சி பெற உள்ளனர். அதில், 20 வீரர்களை தேர்வு செய்து, அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!