வறட்சியால் தென்னைக்காக விலைக்கு வாங்கப்படும் தண்ணீர்
ஒட்டன்சத்திரம் : தொடர் வறட்சி காரணமாக ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள விவசாயிகள் தென்னை மரங்களை காப்பாற்ற 'டேங்கர்' தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர்.
'பிள்ளையை பெத்தா கண்ணீரு, தென்னையை வச்ச இளநீரு' என்ற பாடல் வரிகள் தற்போது முற்றிலும் பொய்த்துப் போகும் வகையில், இயற்கையை நாம் ஏமாற்ற ஏமாற்ற, மழை பெய்வது அரிதாகி வருகிறது. ஒட்டன்சத்திரம் முத்துநாயக்கன்பட்டி, புலியூர் நத்தம், இடையகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீரின்றி தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது. மழையின்றி மீதி உள்ள மரங்களும் காயும் நிலையில் உள்ளது. ஒருசில விவசாயிகள் பருவமழை பெய்தால் தென்னை மரங்களை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில், தற்போது டேங்கர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாய்ச்சி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே சடையன்குளம் கரைமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தென்னை மரங்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.1500க்கு வாங்கி ஊற்றப்படுகிறது. இதே போல் அனைத்து பகுதி மரங்களுக்கும் விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றப்படுகிறது. எஞ்சியுள்ள தென்னை மரங்கள் காயாமல் இருக்க விரைவில் மழை பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
'பிள்ளையை பெத்தா கண்ணீரு, தென்னையை வச்ச இளநீரு' என்ற பாடல் வரிகள் தற்போது முற்றிலும் பொய்த்துப் போகும் வகையில், இயற்கையை நாம் ஏமாற்ற ஏமாற்ற, மழை பெய்வது அரிதாகி வருகிறது. ஒட்டன்சத்திரம் முத்துநாயக்கன்பட்டி, புலியூர் நத்தம், இடையகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீரின்றி தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது. மழையின்றி மீதி உள்ள மரங்களும் காயும் நிலையில் உள்ளது. ஒருசில விவசாயிகள் பருவமழை பெய்தால் தென்னை மரங்களை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில், தற்போது டேங்கர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாய்ச்சி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே சடையன்குளம் கரைமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தென்னை மரங்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.1500க்கு வாங்கி ஊற்றப்படுகிறது. இதே போல் அனைத்து பகுதி மரங்களுக்கும் விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றப்படுகிறது. எஞ்சியுள்ள தென்னை மரங்கள் காயாமல் இருக்க விரைவில் மழை பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!