7 குளங்களில் ரூ.1.08 கோடியில் குடிமராமத்து பணி துவக்கம்
வடமதுரை : வடமதுரை, வேடசந்துார் ஒன்றியங்களில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் 7 குளங்களில் ரூ.1.08 கோடியில் குடிமராமத்து பணிகள் துவங்கியுள்ளன.
நீர்பாசனம் பெறும் பரப்பளவு 40 எக்டேருக்கு மேல் இருக்கும் குளங்களை பொதுப்பணித்துறை பராமரிக்கிறது. இந்த அளவுகோல்படி வேடசந்துார் தாலுகாவில் இருக்கும் பொதுப்பணித்துறை பராமரிக்கும் 9 குளங்களில் 7 குடிமராமத்து திட்ட பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தென்னம்பட்டி, தொட்டனம்பட்டி, மாரம்பாடி, பாடியூர், வேல்வார்க்கோட்டை, பிலாத்து, குளத்துார் என ஏழு குளங்களில் மொத்தம் ரூ.1.08 கோடியில் பணி துவங்கியுள்ளது. இதற்காக ஒவ்வொரு குளத்திற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மூலம் கரை பலமாக்குதல், சீமைகக்கருவேல மரங்களை அகற்றுதல், தேவையான இடத்தில் மதகு பழுது நீக்குதல் போன்ற பணிகள் செய்யப்படுகிறது.
நேற்று தென்னம்பட்டி மந்தைக்குளத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான பணிகளை பரமசிவம் எம்.எல்.ஏ., பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன், நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தலைவர் சுப்புதுரைசாமி, இயக்குனர்கள் ராஜசேகர், ராமகிருஷ்ணன், தேவராஜ், தனலட்சுமி பங்கேற்றனர்.
நீர்பாசனம் பெறும் பரப்பளவு 40 எக்டேருக்கு மேல் இருக்கும் குளங்களை பொதுப்பணித்துறை பராமரிக்கிறது. இந்த அளவுகோல்படி வேடசந்துார் தாலுகாவில் இருக்கும் பொதுப்பணித்துறை பராமரிக்கும் 9 குளங்களில் 7 குடிமராமத்து திட்ட பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தென்னம்பட்டி, தொட்டனம்பட்டி, மாரம்பாடி, பாடியூர், வேல்வார்க்கோட்டை, பிலாத்து, குளத்துார் என ஏழு குளங்களில் மொத்தம் ரூ.1.08 கோடியில் பணி துவங்கியுள்ளது. இதற்காக ஒவ்வொரு குளத்திற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மூலம் கரை பலமாக்குதல், சீமைகக்கருவேல மரங்களை அகற்றுதல், தேவையான இடத்தில் மதகு பழுது நீக்குதல் போன்ற பணிகள் செய்யப்படுகிறது.
நேற்று தென்னம்பட்டி மந்தைக்குளத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான பணிகளை பரமசிவம் எம்.எல்.ஏ., பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன், நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தலைவர் சுப்புதுரைசாமி, இயக்குனர்கள் ராஜசேகர், ராமகிருஷ்ணன், தேவராஜ், தனலட்சுமி பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!