ADVERTISEMENT
புதுடில்லி: தேர்தலுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி இப்போதே திட்டமிடத் துவங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ., மூத்த தலைவர்கள் அமித்ஷா, அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் போன்றவர்களை மோடி அவ்வப்போது சந்தித்து பேசுவது வழக்கம். சமீபத்தில் இவர்கள் சந்தித்தபோது சில தகவல்கள் பரிமாறப்பட்டன.தனது அரசியல் அனுபவத்தில், மக்களின் நாடியை பிடித்து பார்ப்பதில் வல்லவர் மோடி. இம்முறையும் வட மாநில மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து ஆட்சியில் அமர வைப்பர் என நம்புகிறார் மோடி.தேர்தலுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று மோடியும் அமித்ஷாவும் பேசி உள்ளனர். தேர்தலுக்குப் பின் அவர்கள் என்ன செய்யப் போகின்றனர் என்பது இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது.
ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, பிஜூஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி சந்திரசேகர் ராவ், பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி ஆகியோர் பற்றி பேசுவதில் மென்மையான போக்கை பா.ஜ., கடைப்பிடிக்கிறது.
பா.ஜ., மூத்த தலைவர்கள் அமித்ஷா, அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் போன்றவர்களை மோடி அவ்வப்போது சந்தித்து பேசுவது வழக்கம். சமீபத்தில் இவர்கள் சந்தித்தபோது சில தகவல்கள் பரிமாறப்பட்டன.தனது அரசியல் அனுபவத்தில், மக்களின் நாடியை பிடித்து பார்ப்பதில் வல்லவர் மோடி. இம்முறையும் வட மாநில மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து ஆட்சியில் அமர வைப்பர் என நம்புகிறார் மோடி.தேர்தலுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று மோடியும் அமித்ஷாவும் பேசி உள்ளனர். தேர்தலுக்குப் பின் அவர்கள் என்ன செய்யப் போகின்றனர் என்பது இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது.
ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, பிஜூஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி சந்திரசேகர் ராவ், பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி ஆகியோர் பற்றி பேசுவதில் மென்மையான போக்கை பா.ஜ., கடைப்பிடிக்கிறது.
மென்மை போக்கு
மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 எம்.பி.,க்கள் தேவை. இந்த எண்ணை தொடுவதில் சிக்கல் ஏற்பட்டால் பா.ஜ., சிலரின் ஆதரவை கேட்க வேண்டி வரும். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், மாநில கட்சிகளின் ஆதரவை பெற வேண்டி வரும் என மோடி கணக்குப்போடுகிறார். ஆவேசமாக மேடைகளில் பேசும் மோடி, இதனாலேயே சமீபகாலமாக இக்கட்சி தலைவர்கள் பற்றி மென்மையைாக விமர்சனம் செய்கிறார்.மோடிக்கு முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகளான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா கவர்னரான முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி நரசிம்மன் ஆகியோர் தான் மாநில விவகாரங்களிலும் ஆலோசனை வழங்குகின்றனர். மோடி நினைப்பதை இவர்கள் தான் மாநில தலைவர்களின் காதுகளுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும்.