பீகாரில் பா.ஜ.,தொண்டர்கள் மோதல்
பாட்னா: பீகாரில் பா.ஜ.,தொண்டர்கள் இடையே லேசான மோதல் காரணமாக பாட்னா விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது.
பாட்னா தொகுதியில் பா.ஜ.,வேட்பாளராக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். ஆனால் இத்தொகுதியில் ஆர்.கே.சின்கா என்பவர் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். சீட் வழங்கப்படாததால் சின்காவின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் பாட்னாவில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இதற்கென அவர் பாட்னா விமான நிலையம் வந்தார். இவரை வரவேற்க ஆதரவாளர்கள் வந்திருந்தனர். ஆனால் சின்காவின் ஆதரவாளர்கள் கையில் கறுப்புத்துணியுடன் வந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் கூட்டத்தினரை கலைத்தனர்.