ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில், கூட்டணியை முடிவு செய்து அறிவிப்பதற்காக, பா.ஜ., தேசிய தலைவர், அமித்ஷா, இன்று(பிப்.,19) சென்னை வர உள்ள, தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, பல கட்டமாக ரகசிய பேச்சு நடந்தது. தொகுதி எண்ணிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ., பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான, பியுஷ் கோயல், 14ம் தேதி இரவு, சென்னை வந்தார்; கூட்டணியை உறுதிப்படுத்தி சென்றார்.
இந்நிலையில், இன்று, பா.ஜ., தேசிய தலைவர், அமித்ஷா, சென்னை வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அவர், முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர், பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய பின், கூட்டணி தொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என, கூறப்படுகிறது.
முதல்வர், நேற்று தலைமைச் செயலகம் வரவில்லை. அவரது வீட்டிற்கு, மூத்த அமைச்சர்கள் சென்றனர். கூட்டணி குறித்து ஆலோசித்துள்ளனர். பின், மாலையிலும், முதல்வர் வீட்டில், ஆலோசனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, பல கட்டமாக ரகசிய பேச்சு நடந்தது. தொகுதி எண்ணிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ., பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான, பியுஷ் கோயல், 14ம் தேதி இரவு, சென்னை வந்தார்; கூட்டணியை உறுதிப்படுத்தி சென்றார்.
இந்நிலையில், இன்று, பா.ஜ., தேசிய தலைவர், அமித்ஷா, சென்னை வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அவர், முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர், பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய பின், கூட்டணி தொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என, கூறப்படுகிறது.
முதல்வர், நேற்று தலைமைச் செயலகம் வரவில்லை. அவரது வீட்டிற்கு, மூத்த அமைச்சர்கள் சென்றனர். கூட்டணி குறித்து ஆலோசித்துள்ளனர். பின், மாலையிலும், முதல்வர் வீட்டில், ஆலோசனை நடந்தது குறிப்பிடத்தக்கது.