Load Image
Advertisement

உதவி பராமரிப்பாளர் வேலை

காஞ்சிபுரம்:மாவட்டத்தில் கால்நடை துறையில் காலியாக உள்ள, 50 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு, 22ம் தேதி முதல், 25 வரை நேர்காணல் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடைத்துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணி காலியிடங்களை நிரப்ப, 2015ல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.வேலை வாங்கி தருவதாக ஏராளமான இளைஞர்களிடம், அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர், 'வசூலில்' இறங்கினர். இதை அறிந்ததும், நியமனம் நிறுத்தப்பட்டது.இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு இதே வேலைக்கு விண்ணப்பிக்க அரசு அறிவித்திருந்தது. மாவட்டத்தில், 5,482 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு வரும், 22 முதல், 25 வரை, காஞ்சிபுரம் கால்நடை துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற இருக்கிறது.ஆனால், இது தொடர்பாக, கால்நடை துறை இணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து, நிருபர்களுக்கு தகவல் தர மறுக்கின்றனர்.நேர்காணலை ரகசியமாக நடத்த, இத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement