பரந்தூர் மருத்துவமனை அருகே தேவை உயர்கோபுர மின்விளக்கு
பரந்துார்:உயர் கோபுர மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, பரந்துார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாலாஜாபாத் அருகே உள்ளது, பரந்துார். இங்கு, ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. கர்ப்பிணிகள், பிற நோயாளிகள் என, 150க்கும் மேற்பட்டோர், இரவு, பகலாக இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.இரவு நேரங்களில், ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மட்டும் மின் விளக்கு எரிகிறது; வளாகத்திற்கு வெளியே இல்லை.இது குறித்து, புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த, கே.செல்வகுமார் என்பவர் கூறியதாவது:பரந்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வளத்துார், புரிசை, புள்ளலுார், கொட்டவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள், பிரசவத்திற்கு வருகின்றனர். அவர்களுடன் வருவோர், ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், இருளில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் பல வித பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, போதிய மின் விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, உயர் கோபுர மின் விளக்கு அமைத்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!