Load Image
Advertisement

ஒரே பெயரில் உள்ள இருவருக்கு ஒரே எண்ணில், பான் கார்டு

 ஒரே பெயரில் உள்ள இருவருக்கு ஒரே எண்ணில், பான் கார்டு
ADVERTISEMENT
திருச்சி: திருச்சி அருகே, ஒரே பெயரில் உள்ள இருவருக்கு, ஒரே எண் கொண்ட, 'பான் கார்டு' வழங்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி, லால்குடி அருகேயுள்ள, கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42. தனியார் நிறுவன ஊழியரான இவர், வருமானவரித் துறையால் அளிக்கப்படும், பான் கார்டை, ஏழு ஆண்டுகளுக்கு முன் வாங்கினார். அதன் எண்: டி.ஒய்.ஆர்.பி.எஸ்.6164பி. இவர், சில மாதங்களுக்கு முன், வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்துள்ளார். வங்கி நிர்வாகம், 'உங்கள் பெயரில் லோன் உள்ளது, நகை அடமான கடன் உள்ளது; 'செக் பவுன்ஸ்' ஆகியுள்ளது' என்ற காரணங்களை கூறி, கடன் மறுத்துள்ளது.


கடனே வாங்காத செந்தில்குமார், இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரித்ததில், இதே எண் கொண்ட பான் கார்டு, லால்குடி அருகேயுள்ள, வாளாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது தெரிந்தது. இருவரின் பெயர், அப்பா பெயர், பிறந்த தேதி ஒன்றாக உள்ளது. பான் கார்டு எண்ணும் ஒன்றாக இருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாளாடி செந்தில், லோன், நகை கடன் பெற்றுள்ளார். ஆனால், பான் கார்டு குளறுபடியால், கீரமங்கலம் செந்தில், லோன் வாங்கியது போலும், 'சிபில் ஸ்கோர்' குறைவாக இருப்பது போலவும், கம்ப்யூட்டர் காட்டியுள்ளது.


வருமானவரி துறையின் முக்கிய அடையாள அட்டையாக இருக்கும் பான் கார்டு, ஒரே பெயர், பிறந்த தேதி, அப்பா பெயர் இருந்தாலும், ஒரே எண்ணில் வந்துள்ளது, அதன் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.இது குறித்து, இரு செந்தில்குமாரும், வருமானவரி துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.


வாசகர் கருத்து (11)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement