ADVERTISEMENT
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, மதமாற்றம் செய்ய முயன்ற கும்பலை, பொதுமக்கள் சிறைபிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.புதுக்கோட்டை, கீரனுார் அருகே, குளத்துாரில் கிறிஸ்துவ சகோதர சபை உள்ளது. இதை, செல்வராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு, திருமலைராயபுரம், டி.மேலப்பட்டி கிறிஸ்துவ சகோதர சபை ஊழியர்கள் மற்றும் கேரள நண்பர்கள் சிலருடன், ராப்பூசல் கிராமத்திற்கு சென்று, ஏழை மக்களை சந்தித்து, மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள் திரண்டு, செல்வராஜ் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்டோரை சிறைபிடித்தனர். இலுப்பூர் போலீசார் சென்று, அவர்களை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம், 'மதமாற்றம் செய்வது தவறு; இதுபோன்ற செயல்களில், இனி ஈடுபடக்கூடாது' என, எச்சரித்து, அனுப்பி வைத்தனர்.