Load Image
Advertisement

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை

 தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
ADVERTISEMENT
பாங்காக் : தாய்லாந்தில் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் சிக்கிய 'தாம் லுவாங்' குகையிலிருந்து மீட்கப்பட்டனர். இந்த குகை மியூசியமாக மாற்றப்பட உள்ளது.


தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் அமைந்துள்ளது மே சாய் நகரம். மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் மலைப்பகுதியில்'தாம் லுவாங்' குகைத் தொடர் அமைந்துள்ளது. கடந்த ஜூன் 23-ஆம் தேதி இக்குகையினை பார்வையிட சென்ற 12 சிறுவர்கள் அடங்கிய கால்பந்து அணியும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் திடீரென பெருமழையியால் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.


ஒரு வாரத்திற்குப் பிறகு அவர்கள் உள்ளே சிக்கி இருப்பது தெரிய வந்தது. தாய்லாந்து கடற்படை வீரர்கள், மீட்புக் குழுவினர் மற்றும் சர்வதேச மீட்புக் குழு அணியினரின் முயற்சிகளால் 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் ஜூலை10ம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர்.


இச்சம்பவத்தால் உலகப் புகழ்பெற்று விட்ட தாய்லாந்தின் 'தாம் லுவாங்' குகை, தற்பொழுது மியூசியமாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீட்புக் குழு தலைவரும், முன்னாள் மாகாண ஆளுநருமான நரோங்சக் சோட்டாநாகோர்ன் கூறியதாவது: இந்த குகைப் பகுதி முழுமையாக மியூசியமாக மாற்றப்பட உள்ளது. எப்படி சிறுவர்களை மீட்கும் பணி நடைபெற்றது என்பதை விளக்கும் விதமாக பதிவுகள் இங்கு இடம்பெறும். அத்துடன் பார்வையாளர்களும் பங்கு பெறும் விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. இது கண்டிப்பாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான ஒரு இடமாக மாறும், என்றார்.


வாசகர் கருத்து (5)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement