Load Image
Advertisement

தேசிய யோகாசன போட்டி காஞ்சி மாணவர்கள் தேர்வு

காஞ்சிபுரம்:புதுடில்லியில் நடைபெறும், தேசிய அளவிலான, யோகாசன ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆறு மாணவ - மாணவியர், தமிழக அணி சார்பில் தேர்வாகியுள்ளனர்.

மாநில அளவிலான, யோகா ஒலிம்பியாட் போட்டி, திருச்சியில், மே, 24ல் நடந்தது.இதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த, மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

பெண்கள் பிரிவில், காஞ்சிபுரம், எஸ்.எஸ்.கே.வி., பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியர், ஜி.கே.யுவலட்சுமி, ஜி.கே.யுவஸ்ரீ, அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆர்.ரம்யா மற்றும் தியாகி நடுநிலை பள்ளி, ஆர்.காயத்ரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.ஆண்கள் பிரிவில், அந்திரசன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, ஜி.முகமது ஜாமல், ஜி.முகமது சையத் ஆகியோர் தேர்வாகினர்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதால், இவர்கள் ஆறு பேரும், புதுடில்லியில், ஜூன், 18ல் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.
தமிழக அணி சார்பில் பங்கேற்கும், 16 பேரில், ஆறு மாணவ - மாணவியர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.முதன்மைக் கல்வி அலுவலர், திருவளர்செல்வி, மாணவர்களை வாழ்த்தினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement