Advertisement

மடாதிபதி துாக்கிட்டு தற்கொலை மூன்று பக்க கடிதத்தில் பரபரப்பு



ராம்நகர்,-கஞ்சுகல் பண்டி மடத்தின் மடாதிபதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதிரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்வதாக எழுதிய கடிதம் சிக்கியது.

ராம்நகர் மாகடி அருகே உள்ள சோலுார் கஞ்சுகல் பண்டி மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமிகள், 45. இவர் நேற்று முன்தினம் இரவு மடத்தில் உள்ள ஓய்வு அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மடத்தின் ஊழியர்கள், குதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். மடாதிபதி எழுதி வைத்திருந்த மூன்று பக்க கடிதம் கிடைத்தது. அதில், 'எதிரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதை தடுக்க முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, குறிப்பிட்டுள்ளார். எதிரிகள் யார் என்பதையும் தௌிவுபடுத்தி உள்ளார்.

இவர் சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார்.

உடல் எடையை குறைக்க ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டு வந்தார் என மடத்தின் ஊழியர்கள் கூறினர். இவரது உடல் அடக்கம் நேற்று மடத்தின் வளாகத்தில் நடந்தது. அவரது கடித்தில் குறிப்பிட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement