வாசகர் கருத்து (7)
திரு.கலெக்டர் அவர்கள் அரசு அலுவலர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் கட்டாயம் பைன் போட வேண்டும் என்பது வரவேற்கதக்கது. நேற்று கோவை ப்ரூக் பில்ட் ரோட்டில் ஒரு வயதான தாயும் மகனும் ஸ்கூட்டரில் வரும்போது ரோட்டில் இருந்த குழியில் வண்டியை விட்டு விழுந்து விபத்து ஏற்பட்டு அந்த தாய் மருத்துவமனையில் உள்ளார். இப்படி ஒவ்வொரு ரோட்டும் குண்டும் குழியுமாக உள்ளது அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதை சரியாக மேற்பார்வை செய்யாத அரசு அதிகாரியின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் எங்கு பார்ததாலும் ரோடு எங்கு உள்ளது என்பதை தேடவேண்டி உள்ளது. கேட்டால் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி என்று செல்வீர்கள், பெரும்பாலான விபத்துக்கள் ரோட்டில் உள்ள குண்டும் குழியால் தான் ஏற்படுகிறது,திரு கலெக்டர் அவாகள் தக்க நடவடிக்கை எடுப்பீர்களா?
தலைக்கவசம் அணிவது நல்லதுதான். ஆனால், முதலில் விபத்துக்கள் ஏன் நடக்கின்றன என்று பாருங்கள். மது, சாலை விதிகளை மதிக்காமை, குண்டும் குழியுமான ரோடுகள், ஆக்கிரமிப்புகள். இவைகள்தான் விபத்திற்கு காரணமாகின்றன. எந்த ஒரு பிரச்சனையையும் அதன் மூலத்தை சரி செய்ய வேண்டும் அதுதான் நிரந்தர தீர்வு. இதை செய்ய வேண்டிய அரசு அதை விட்டுவிட்டு தலைக்கவசத்தை மட்டும் பொதுமக்களிடம் திணித்தால் எப்படி? இது எப்படி இருக்கிறது என்றால், நான் விபத்தை ஏற்படுத்துவேன். ஆனால், நீ தலைக்கவசத்தை அணிந்து தப்பித்துக்கொள் என்பது போல் இருக்கிறது. நீதிமன்றங்களும் இதை ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்று புரியவில்லை. உருப்படுமா நாடு?
எவனுக்கும் எமன் உடன் போராட முடியாது
அதேபோல் வக்கீல்கள் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்கள். அவர்களை பிடித்து ₹.10,000 அபராதம் போடவேண்டும்.
யமனுக்கு அரசு அலுவலர், துறை அதிகாரி என்பதெல்லாம் தெரியாது அவனிடம் ஐ டி காட்டினாலும் விடமாட்டான் சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதான்
கையில் குச்சியை எடுத்துக்கொள்ளலாம். நேற்று ஒருநாள் மட்டும் இருந்த கருத்து சுதந்திர தடை நீங்கியது மகிழ்ச்சி.