வாசகர் கருத்து (6)
அருமையான கருத்துக்கள், அதே போல் சிறு விவசாயி யார் குறு விவசாயி யார் அவர்களுக்கு உரிய திட்டம் என்ன என்பது தெளிவு படுத்த வேண்டும் மேலும் பெரும் வியாபாரிகள் அனைவரும் வருமான வரிக்கு உட்படுத்த வேண்டும்
முறைபடுத்திய பனைமர கள் இறக்க அனுமதித்தாலே பாதி விவசாயி பிரச்சினை தீர்ந்து விடும்.
விவசாயி வியாபாரியாகவும் மாறும் வகையில் சட்டதிட்டங்களை அமையுங்கள். விவசாயி அடையாளம் காணும் வகையில் கார்ட் விநியோகம் விரைவு படுத்துங்கள். பினாமிகளை ஒழியுங்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
விவசாயம் மாநில அரசின் பட்டியலில் உள்ளது என்று எல்லா அரசியல்வாதிகளும் சொல்லிக்கொண்டுதான் இருந்தார்கள், இருக்கிறார்கள். அந்த அந்த மாநில அரசுகள் இதுநாள் வரைக்கும் அதிக கடன், குறைந்த வட்டி, தள்ளுபடி, மானியம், காப்பீடு என்று ஒரு வட்டத்தில் மட்டுமே விவசாயிகளை வைத்திருந்தார்கள். இதுநாள்வரை,அவர்களை இடைத்தரகர்களிடம் இருந்து பாதுகாக்க ஏன் ஒரு தனி சட்டம் இயற்றவில்லை? இதே போன்று நெசவாளர்களுக்கு பிரச்சினை உள்ளது. உள்ளூர் சந்தைகளில் வியாபாரம் செய்யமுடியாத அளவுக்கு நிறைய குறு வியாபாரிகள் இருக்கிறார்கள். எத்தனையோ சுயஉதவி குழுக்கள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நல்ல முறையில் விற்பதற்கு போதுமான கட்டமைப்பு தரப்படவில்லை. அதை யாரும் பேசுவதில்லை. கூட்டுறவு சங்கங்கள் அரசியல் தலையீடு இன்றி நடக்கிறதா? தனியார் பத்துபேர் ஒன்று சேர்ந்து கூட்டுறவு சங்கம் அமைத்து அரசாங்கத்தின் டெண்டரை பெற்றுவிடுகிறார்கள். அவை எல்லாம் மாநிலங்களின் அதிகாரத்தின் கீழ்த்தானே வருகின்றன? ஏன் அவற்றை நெறிமுறைப்படுத்தவில்லை? விவசாயிக்காக வரிந்துகட்டிக்கொண்டு போராட்டம் செய்பவர்கள் நெசவாளர்கள், உள்ளூர் சந்தை பாதுகாப்பு, சிறு குறு வியாபாரிகள் நலன், என்றெல்லாம் ஏன் யோசிக்கவில்லை? அவர்களும் இன்று நிறையவிதத்தில் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இடைத்தரகர்கள் கமிஷன் ஏஜெண்டுகள் என்ற போர்வையில் அரசியல்வாதிகளின் ஆதரவோடு சந்தைகளில் கல்லா கட்டுவதை யாரவது பேசியிருக்கிறார்களா? அவர்களை தடுக்கத்தான் முடிகிறதா? வாரச்சந்தை கூடும் இடங்களில் நடைபாதை வியாபாரிகளிடம் வசூல் செய்யாத தாதாக்கள் பற்றி யாருமே வாய்திறக்கவில்லை. விவசாயிகள் போன்று அவர்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிற்பவர்கள்தானே? அவரவர் தங்கள் ஊரில் கொஞ்சமாக வியாபாரம் பார்த்தாலும் நிம்மதியாக பார்க்கலாம். உள்ளூரிலேயே பெரிய வியாபாரிகள் சிறு வியாபாரிகளை நசுக்கி விடுகிறார்கள். நிம்மதியாக வியாபாரம் செய்ய விடுவதில்லை. இந்த மாதிரி சட்டம் இயற்றி மத்திய அரசு தலையிட வேண்டியிருக்கிறது.