
'பத்து தல' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து 'பத்து தல' படம் இரண்டு நாட்களுக்கு முன்பு மார்ச் 30ம் தேதி வெளியானது.
முதல் நாளில் இப்படம் 12 கோடியே 30 லட்சம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறித்தது. நேற்று இரண்டாவது நாளிலும் 10 கோடி வரை வசூல் இருந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களில் ஒருவரான சக்திவேல் படம் மாபெரும் வெற்றி என்று சொல்லி சிம்பு மற்றும் படக்குழுவினரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 'பத்து தல' படத்திற்குக் கடும் போட்டியாக 'விடுதலை' படம் இருப்பதால் 'பத்து தல' குழுவினர் படத்தைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒன்றை செய்து பிரபலப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.
வாசகர் கருத்து (3)
என்ன கருமமுன்னே புரியவில்லை. ஒரே நாளில் வெற்றி என்று விழா கொண்டாடும் இந்த கோமாளிகளை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
என்ன படம் ரிலீஸ் அன்றே வெற்றி விழா வா... Oothikichaa.. இதுக்காகவா அந்த adangaathavan அந்த அடாவடி பேச்சு பேசினான். பதிவு அருமை. பார்க்க vendaam என்று நினைத்த ஆட்களை கூட பார்க்க thonum பதிவு. பார்த்தவர்கள் sonnadu பத்து தல இருந்தாலும் ஒரே தல தான் தல nu சொன்னாங்க... படம் paakum போது பத்தல pathala nu sollama vairu pathi கிட்டு எரியுது nu சொன்னாங்க படமா இது என்று. எதிர்பார்ப்பு la paarpum இல்லை எந்த பருப்பும் உம் இல்லை Only str மட்டும் தான் nu சொன்னாங்க. Enaku ஆரம்பம் முதலே இஷ்டம் இல்லை பார்க்க.. But ninaivirukka பாடல் ரிலீஸ் ஆகி அடு்த்த நிமிடம் என் காதில் ringaaram...
படத்தை ரிலீஸ் பண்ணுறதே வெற்றி தான் போல..