* உங்களது எண்ணத்தை வைத்தே எதிர்காலம் நிர்ணயமாகிறது.
* பறவை, விலங்குகளிடம் இருந்தும் பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
* கற்பனை பயத்திற்கு இரையாகி விடாதீர்.
* மன நிதானத்தை இழக்காதீர். அது அறிவை இழப்பதற்கு சமம்.
* உங்களது சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கட்டும்.
* சென்றதை நினைத்து வருத்தப்படாதீர். வாழ்க்கையை புதிதாக தொடங்குங்கள்.
* மனநிறைவே பெரும் செல்வமாகும்.
* வாழ்க்கையும், நேரமும் விலை மதிக்க முடியாதது.
* தெய்வீக எண்ணத்தால் உங்களது மனதை நிரப்புங்கள்.
* உங்களது செயலே பிரச்னைக்கு காரணம்.
* உண்மை, பொய்யை பிரித்து அறிய கற்றுக்கொள்ளுங்கள்.
* கடவுள் உங்களை சோதிக்கிறாரா... கவலைப்படாதீர். அவர் அருள்புரிய போகிறார்.
* அறிவை விட பக்தியே சிறந்தது.
* உங்களை அறிந்தால் நீங்கள் விரும்பியதை பெறலாம்.
* உண்மையாக இருங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
* வாழ்க்கை சிறியது. காலமோ பெரியது.
* நேர்மையை ஒருபோதும் கைவிடாதீர்.
என்கிறார் சிவானந்தர்
எண்ணத்தை வைத்தே எதிர்காலம்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.