இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் புகைப்படம் வழியாக..
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடந்த கொரோனா தொற்று வராமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கொரோனா பாதிப்பு தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில் பங்கேற்று ஆலோசனை நடத்திய தமிழக அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள்.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இ-பாஸ் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் சென்னை மாவட்ட எல்லையை கடக்க முயன்ற வாகனங்களை போலீசார் சோழவரம் சுங்கச்சாவடி அருகே பறிமுதல் செய்து நிறுத்தி வைத்துள்ளனர்.
திருப்பூர், குமரன் ரோடு ஆதார் மையத்தில் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக நிற்கும் பொதுமக்கள்.
திருப்பூர், நல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி முதல்வர் உத்தரவுப்படி கடலூரிலிருந்து வந்த தமிழக வாகனங்களை மாநில எல்லைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டது.
சாரல் மழை : நேற்று மாலை பொழுதில் சில்லென காற்றுடன் மழை பெய்தது. இடம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பூத்துள்ள பெட்டூனியா பூ.