படைப்பு: சக்கம்மா (சிறுகதை)
எழுதியவர்: வேலராமமூர்த்தி
வெளியீடு: வம்சி புக்ஸ்
'அடேய்... தம்பீ...வேணாம்டா...' --குறுக்கே விழுந்து மறித்த செல்லம்மாவையும் மீறி வேம்புவின் வேல்கம்பு குத்து, துரைச்சாமியின் இடது விலாவிலும் நடுநெஞ்சிலும் இறங்கியது.
'என் புருஷனை கொன்னுட்டியேடா கொலைகாரப் பாவி!' செல்லம்மா மயங்கிச் சரிந்தாள்.
ஆண்டுகள் பல உருண்டோடின.
விடுதலையாகி வந்த வேம்பு யாரையும் ஏறெடுத்துப் பார்க்காமல், தன் மனைவி கழுவேறிச் செத்த நந்தவனத்திற்குள் நுழைந்தார். பதினைந்து நாட்களாய் அன்ன ஆகாரமில்லை; ஆள் நடமாட்டமும் இல்லை. தன் தாலியைப் பறித்த தம்பி விடுதலையாகி வந்திருக்கும் தகவல் செல்லம்மாவுக்கும் தெரியும். ஆனால், அவள் நகரவில்லை.
பதினைந்தாவது நாள்...
நிற்காத விக்கல்; அழுதபடியே, தம்பியின் நெஞ்சை செல்லம்மா தடவி விட்டுக் கொண்டிருந்தாள்.
வேம்புவின் தொண்டைக்கும் நெஞ்சுக்குமாய் உருண்டு கொண்டிருந்த மனைவியின் நினைவு, அக்கா செல்லம்மா ஊற்றிய கடைசி சொட்டுப் பாலில் நின்று போனது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!