* குற்றவாளிகளை விரட்டிப் பிடிச்சா உயரதிகாரிகள்கிட்டே இருந்து வெகுமதியும், பாராட்டும்; என்ன இது... செயின் பறிப்பு திருடனை விரட்டிப் பிடிச்ச இளைஞனை அழைச்சு பாராட்டுனது ஓகே! ஆனா, தன் கடமையை செஞ்ச காவலர்களுக்கு எதுக்காக பாராட்டும், வெகுமதியும்; இந்த கடமையைச் செய்றதுக்கு தானே அவங்க சம்பளம் வாங்குறாங்க!
* 'எனக்கு இவ்வளவு பணமும், பேரும், புகழும் கொடுத்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதான், அரசியலுக்கு வர்றேன்!'னு சொல்ற நடிகர்களைப் பார்த்து, 'அரசியலுக்கு வந்து நல்லது செய்யணும்னு ஏன் நினைக்கிறீங்க; நாங்க உங்களுக்கு கொடுத்த பணத்தை வைச்சே ஏதாவது செய்யுங்களேன்'னு நம்ம மக்கள் ஏன் இன்னும் சொல்லலை!
* 'உங்க நல்லதுக்காகத் தான் ஹெல்மெட் போடச் சொல்றோம்!'னு அறிவுரை சொல்றவங்க, 'நாட்டோட நலனுக்காக கையூட்டு வாங்கக் கூடாது!'ன்னு ஏன் சிந்திக்க மாட்டேங்குறாங்க!
ம்ஹும்... அந்த 'சர்கார்' திருந்திருச்சு!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!