Load Image
Advertisement

மூக்கழகி!

படத்தில், பெரிய மூக்கு துவாரங்களுடன் பயமுறுத்துபவர் இந்திய மாநிலங்களில் ஒன்றான, அருணாசல பிரதேசத்தில் உள்ள, அபதானி என்ற கோத்திர பிரிவைச் சேர்ந்த, ஆதிவாசி பெண்மணி.
இதுபோன்ற சிறப்பு மூக்குகளை அழகின் அடையாளமாக நினைக்கின்றனர், அபதானி கோத்திர பெண்கள். எனவே, சிறு வயதிலிருந்தே மூக்கு துளைகளை பெரிசு படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
ஒரு காலத்தில், அபதானி பெண்களின் அழகில் மயங்கியவர்கள், அப்பெண்களை கடத்திச் சென்றனர்.

அழகு இருந்தால் தானே கடத்துவர். அதனால், அழகை சிதைக்கத்தான் மூக்கு துவாரங்களை பெரிதுபடுத்திக் கொண்டனர்.
ஆனால், தற்கால பெண்கள், தங்கள் மூக்குகளை அசிங்கப்படுத்த தயாராக இல்லை.
— ஜோல்னாபையன்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement